Thursday 16 January 2014

செய்திகள் 

கருணை அடிப்படை வேலைக்கான COMPASSIONATE APPOINTMENT 
புதிய விதிமுறைகள் முன்மொழியப்பட்டு BSNL நிர்வாகக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

JTO பதவிகளில் பல ஆண்டுகளாக OFFICIATING செய்து வரும் 
TTA தோழர்களின் JTO பணியமர்த்தல்  குறித்து முடிவெடுக்க அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையை  CMDயின்  ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.  அதன் மீது தொழிற்சங்கங்கள் தங்களது கருத்தை தெரிவித்த பின்னர் இறுதி முடிவெடுக்கப்படும்.

 இரகசியக்குறிப்பேட்டில் AVERAGE -  சுமார் என்று முத்திரை குத்தப்பட்டு  நாலு கட்டப்பதவி உயர்வு கிட்டாத தோழர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நம்மால் எழுப்பப்பட்டு வந்தது. தற்போது  AVERAGE முத்திரைகள் இருந்தாலும் பதவி உயர்வு வழங்கும் வகையில் BSNL நிர்வாகம் நாலு கட்டப்பதவி உயர்வில் திருத்த உத்திரவு வெளியிட்டுள்ளது. 
இந்திய அரசியல் சட்டத்திற்கு அடுத்தபடியாக அதிகமான திருத்தங்களைக்கொண்டது நமது 4 கட்டப்பதவி உயர்வாகும். 

BSNLலில் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வு காலப்பலன்கள் வழங்குவது குறித்து முடிவு செய்ய நடத்தப்பட்ட கூட்டத்தில்  நிர்வாகத்தரப்பில் இருந்து 2 சத பங்களிப்பு தரப்படும் என கூறப்பட்டது. இதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. 
தொடர்ந்து விவாதம் நடைபெறும்.

ஊழியர் சேமநல நிதிக்கான EPF வட்டி விகிதம் 
8.5 சதத்திலிருந்து 8.75 ஆக உயர்த்தப்படவுள்ளது. நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப்பின்னர் இது அமுல்படுத்தப்படும் 

 தமிழகத்தில் TTA பதவிகளுக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்ட 
27 தோழர்களுக்கு 27/01/2014 அன்று பயிற்சி வகுப்பு சென்னை மீனம்பாக்கம் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமாகின்றது. காரைக்குடியில் இருந்து இராமேஸ்வரம் பகுதியைச்சேர்ந்த ஜனார்த்தனன் என்ற தோழர் 
பயிற்சிக்கு செல்கின்றார். நமது வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment