Sunday 17 May 2015

மே - 18
கொள்ளி வைக்காமல்
அள்ளி வைத்த
முள்ளிவாய்க்கால் 
மே 18
இலட்சியத்தமிழன்...
இலட்சக்கணக்கில் அழிக்கப்பட்ட நாள்..

யாதும் ஊரே.. யாழும் ஊரே 
என்று வாழ்ந்த  தமிழன்...

முள்ளிவாய்க்காலில்..
வான் வழி கொள்ளியால் 
கொத்துக் கொத்தாய் 
கொள்ளி வைக்கப்பட்டான்..

முள்ளிவாய்க்கால் படுகொலை 
மானுடத்தின் பேரவலம்..
மனித குலம்..
மன்னிக்க முடியாத கொடுமை..

ஈழத்துக்கவிஞன் ஒருவன் எழுதினான்..
"அரைகுறை உயிரோடு...
அரை நிர்வாண உடலோடு..
கிடந்த எங்களின்..
வழிந்த குருதியை அடைத்திட 
கிழிந்த தன் சேலை  தந்தாள் 
என் தாய்.. ஈழத்து தாய்...
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே 
தன் சேலை உருவி 
தடுப்புச்சுவர் தந்தாள்.. 
மரிக்கும் நிலையிலும்..
மனிதம் சொன்னாள்...
பரலோகம் செல்லும் நிலையிலும் 
பண்பாடு காத்தாள்.."

பாருக்கே பண்பாடு சொன்ன தமிழன்...
இனவெறியால் அழிந்த கொடுமையை..
நினைத்தாலே  நெஞ்சம் வேகுமே...

No comments:

Post a Comment