Friday 8 May 2015

ஆம் மன்னா... ஆமாம் மன்னா...

மந்திரியாரே..
நமது தேசத்தில் மும்மாரி பெய்கிறதா?
ஆம்... மன்னா... ஆமாம்... மன்னா...

காலையில் கதிரவனும் மாலையில் முழுமதியும் உதிக்கிறதா?
ஆம்... மன்னா... ஆமாம்... மன்னா...

ஒப்பந்த ஊழியர்களுக்கு 7ம் தேதி சம்பளம் கிடைக்கிறதா?
ஆம்... மன்னா... ஆமாம்... மன்னா...

அவர்களுக்கு EPF மாதந்தோறும் கட்டப்படுகிறதா?
ஆம்... மன்னா... ஆமாம்... மன்னா...

அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறதா?
ஆம்... மன்னா... ஆமாம்... மன்னா...

அவர்களுக்கு ESI மருத்துவ அட்டை கண்ணில் காட்டப்படுகிறதா?
ஆம்... மன்னா... ஆமாம்... மன்னா...

தீபாவளிக்கு முன்னே போனஸ்  வழங்கப்படுகிறதா?
ஆம்... மன்னா... ஆமாம்... மன்னா...

நமது ராஜ்ஜியத்தில் அமைதிப்புறா பறக்கிறதா?
அது மட்டும் இல்லை மன்னா...
அது பறப்பதும் பறக்காததும்...
உங்கள் கையில்தான் உள்ளது.... மன்னா....
================================================================
ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினை சம்பந்தமாக 
மேல்மட்ட நிர்வாகம் கேட்கும் கேள்விகளுக்கும்  
கீழ்மட்ட நிர்வாகங்கள் சொல்லும் பதிலுக்கும் 
புலிகேசி - மந்திரி உரையாடலுக்கும் 
எந்த சம்பந்தமும் இல்லை என 
படிப்போர் தயவு செய்து நினைத்து விட வேண்டாம்..

No comments:

Post a Comment