Monday 4 May 2015

பாசமிகு தோழர் திருச்சி.மனோகரன்
அவர்களின் பணி நிறைவு விழா..  
NFTE இயக்கத்தின் தளபதி 
திருச்சி மாவட்டத்தின் தல பதி 
தோழர்.மனோகரன் அவர்களின் 
பணி நிறைவு விழா 02/05/2015 அன்று 
வந்தோர் மகிழ்ந்திட.. வராதோர் வருந்திட..
திருச்சியில் சீர் மிகு வண்ணம் நடைபெற்றது.

தோழர்கள். ஆர்.கே., பட்டாபி,ஜெயராமன்,சேது,தமிழ்மணி 
என தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து 
தோழர்கள் வந்து வாழ்த்துக்களை வழங்கினர்.

தன் இயக்கப் பணியின்  நிறைவுக் காலத்தில் 
அறம் எது? புறம் எது? என்று அறிந்து 
அறவழி நின்று.. புறவழி தவிர்த்து..
இயக்கம் காத்திட்ட..
அன்புத்தோழர்.மனோகரன் 
அவர்களின் பணிநிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்.

No comments:

Post a Comment