Wednesday 6 May 2015

ஒப்பந்த ஊழியர் சம்பளம் 

காரைக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 2015 மாத 
ஒப்பந்த ஊழியர் சம்பளம் இன்று 07/05/2015 பட்டுவாடா செய்யப்படும் என உதவிப்பொதுமேலாளர்  நிர்வாகம் உறுதி அளித்துள்ளார். 
நமது முன்கூட்டிய நன்றியை உரித்தாக்குகின்றோம்.

1000 தொழிலாளர்களுக்கு கீழே வேலை செய்யக்கூடிய இடங்களில் 
ஒவ்வொரு மாதம் 7ம் தேதியும், 
ஆயிரத்துக்கும்  அதிகமானோர் வேலை செய்யக்கூடிய இடங்களில் 
பிரதி மாதம் 10ம் தேதியும் 
சம்பளம் வழங்கப்பட வேண்டும் 
என்பது தொழிலாளர் ஊதியச்சட்டமாகும். 
ஆயினும் எங்கும் இது அமுல்படுத்தப்படவில்லை.

 தொழிலாளர் மாதமாகிய மேத்திங்கள் மாதத்திலிருந்தாவது தொழிலாளர்களின் சம்பள பட்டுவாடா 
முறைப்படுத்தப்படும் என நம்புவோம். 

மேலும் காரைக்குடியில் வார விடுப்பு அளிப்பதில் சிக்கல்கள் எழுந்தன. BSNLEU  சங்கத்துடன் இணைந்து சென்று அதிகாரிகளை சந்தித்து பிரச்சினையை சாதகமாக தீர்த்துள்ளோம்.  

நிதி மற்றும் நிர்வாக அதிகாரிகளின் 
மனித நேயப்போக்கு உதவிகரமாக இருந்தது.


  • உரிய தேதியில் சம்பளம் வழங்குதல் 
  • அடையாள அட்டை வழங்குதல்,
  • ESI மருத்துவ அட்டை வழங்குதல், 
  • EPF பிடித்தம் செய்தல்...
  • EPF  UAN எண் ஒதுக்கீடு 
  • அனைவருக்கும் 8 மணி நேரப்பணி வழங்குதல்
  • போனஸ் வழங்குதல் 

ஆகிய பிரச்சினைகளை தீர்க்க கோரி 
நமது TMTCLU தமிழ் மாநிலச்சங்கம் 
மே 19 அன்று சென்னையில் 
அறப்போர் 
நடத்த அறைகூவல் விடுத்துள்ளது. 

சென்னை செல்வோம்...
நம் உரிமை வெல்வோம்...
தயாராவீர்.. தோழர்களே...

No comments:

Post a Comment