Friday 15 May 2015

TTA  தேர்வுகளும் 
தீராத பிரச்சினைகளும் 

TTA  இலாக்காத்தேர்வெழுத தகுதியுடைய 
131  தோழர்களின் பட்டியல் 
மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
நமக்கு அதுவல்ல  பிரச்சினை...
 98 தோழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதுதான் நமது பிரச்சினை. 


55 வயதிற்கு மேல் உள்ளவர்கள் எனக்கூறி 
9 தோழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 
55 வயதிலே கதாநாயகனாகலாம்.. 
ஜனாதிபதியாகலாம்.. பிரதமராகலாம்... முதல்வராகலாம்.. 
TTA மட்டும் ஆக முடியாதாம்...

கல்வித்தகுதி இல்லாதவர்கள் எனக்கூறி 
65 தோழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 
கல்வி மந்திரிக்கே கல்வித்தகுதி கேட்காத நாடு இது.. 
பாவப்பட்ட போன்மெக்கானிக் மட்டும் தகுதியோடு இருக்க வேண்டுமாம்.

கல்வித்தகுதி இருந்தும்.. அது குறிப்பிட்ட தேதியில் 01/07/2014 அன்று இல்லை என்று சொல்லி 3 தோழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதுதான் கொடுமையிலும் கொடுமை.  
ஓட்டப்பந்தயத்தின் அன்று உடல் தகுதி இருந்தால் போதாதா?

கல்வித்தகுதி இருந்தும்.. வயது இருந்தும்..
குறிப்பிட்ட போன் மெக்கானிக் சம்பளவிகிதத்தில் இல்லை என்று கூறி ஒரு தோழரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 
TTA  பதவிக்கு அறிவும் திறமையும் ஆர்வமும் போதாதா?  
குறிப்பிட்ட சம்பளம் வேறு வேண்டுமா?

போன்மெக்கானிக் சம்பள விகிதத்தில்..
தொடர்ந்து 5 ஆண்டுகள் சேவை இல்லை என்று காரணம் சொல்லி 
20 தோழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.  
இவர்களுக்கு வேண்டிய கல்வித்தகுதி உள்ளது. 
5 ஆண்டுகளுக்கு மேல் இலாக்கா சேவை உள்ளது. 
குறிப்பிட்ட வயது வரம்புக்குள்ளும் இருக்கின்றார்கள். 
குறிப்பிட்ட சம்பள விகிதத்திலும் இருக்கின்றார்கள்...
ஆனாலும் குறிப்பிட்ட சம்பள விகிதத்தில் 5 ஆண்டு சேவை இல்லை என்று சொல்லி நிராகரிப்பது மிகப்பெரிய அபத்தமாகும். 

பழைய காலங்களில் இலாக்காவில் நுழைந்து  
3 ஆண்டு சேவை முடித்து..
QPC என்னும் அரை நிரந்தரம் பெற்றவர்கள் பலர் 
இயக்குனர், எழுத்தர், செம்மையர்  மற்றும்  JAO தேர்வு எழுதி 
இன்று ஆகப்பெரிய அதிகாரிகளாகவும்  இருக்கின்றார்கள். 
ஆனால் சாதாரண TTA  பதவிக்கு ஆயிரம் நிபந்தனைகளை விதிப்பது மிகப்பெரிய மனக்கொதிப்பை ஊழியர்களிடம்  உருவாக்கியுள்ளது. 

அன்று...
எத்தனை.. எத்தனை மாற்றங்கள்..
இன்று....
எத்தனை.. எத்தனை ஏமாற்றங்கள்... 

குப்தா என்னும் மாமனிதன் இருந்திராவிட்டால்.. 
குப்பையிலே பல தோழர்கள் கிடந்திருப்பார்கள்...

அன்று நடத்தப்பட்ட தேர்வுகளை..
ஆயிரம் ஆயிரம் தோழர்கள் பதவி உயர்வு பெற்ற 
அற்புதக் கண்கொள்ளாக்காட்சியை.. 
எண்ணி எண்ணி இன்புறுகிறோம்...
இன்றைய கையறு நிலையையும்..
எண்ணி எண்ணி ஏமாற்றம் கொள்கின்றோம்.. 

இன்றைக்கும் பல தோழர்களிடம்.. 
பதவி உயர்வுக்கான தகுதியும் திறமையும் தாகமும் உள்ளது..
ஆனாலும்...
விதிக்கப்படும் நிபந்தனைகளைக் கண்டு 
விதியை நொந்து ஊழியர்கள் புலம்புகிறார்கள்...

இனி..
விதியை நொந்து பலனில்லை...
பாதிக்கப்பட்ட தோழர்கள் 
சட்ட விதியை நம்பி 
வழக்கு மன்றம் செல்வதைத் தவிர வழியில்லை...

RR என்பது யாராலும் மாற்றப்பட முடியாத பைபிள் அல்ல...
நீதிமன்றம் பதவிக்கு பாதகம் செய்யாது...
உயர்வுக்கு ஊறு விளைவிக்காது... 
நமது இன்றைய  அனுபவம்...
நம்பிக்கையோடு செல்வோம்.. தோழர்களே...

No comments:

Post a Comment