Tuesday 14 July 2015

விடை பெற்றது...
விஸ்வநாதம்...
மெல்லிசை மன்னர் M.S.விசுவநாதன்  

தமிழ்த்தாய்க்கு.. 
வாழ்த்திசைத்த மலைமகன்.. 
மெல்லிசையின் தலைமகன்..

மெட்டுக்களை..  மொட்டுக்களாக்கியவன்..
சந்தங்களை.. சந்தடிகளில் சேர்த்தவன்..

கவிஞர் வாலி சொன்னார்..
"விசுவநாதனை சந்திக்கும்வரை 
எனக்கு சோறு தின்ன வழியில்லை..
சந்தித்தபின்.. 
எனக்கு சோறு தின்ன நேரமில்லை"

கலை வித்துக்களை உருவாக்கிய விருட்சம்..
கண்ணதாசனை உயர வைத்த பொக்கிஷம்..

பாட்டுக்கள் உள்ளவரை..
பாமரர்கள் உள்ளவரை..
விசுவரூபம்.. 
மங்காது... மறையாது..

No comments:

Post a Comment