Tuesday 21 July 2015

மெல்லத் திறந்தது கதவு..
அமெரிக்க - கியூப அதிபர்கள் அன்போடு உரையாடும் காட்சி 

54 ஆண்டுகளாக 
அடாத பகை கொண்டு வாழ்ந்த 
அமெரிக்க கியூப தேசங்கள் 
தங்கள் பகை மறந்து...
நேசக்கரம் நீட்டியுள்ளனர்..

இரு நாட்டுக்கொடிகளும்..
இணைந்து பறக்கின்றன..
மூடிக்கிடந்த மனங்கள் திறந்தன...
மூடப்பட்ட   தூதரகங்கள்  திறந்தன...
அமைதிக்கதவு மெல்லத்திறந்துள்ளது...
அனைவரும் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்...

"உங்களுக்குத் தொழில் இங்கே 
அன்பு செய்தல் கண்டீர்.. "
என்று  உலக மக்களை 
அன்பென்னும்  
தொழில் செய்யத்தூண்டினான் 
மகாகவி பாரதி...

அந்த வழியில்.. அன்பு வழியில்..
உலகம் நடை போடவேண்டும்....
நமது வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment