Monday 13 July 2015

TTA
கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை

01/01/2007க்குப்பின் BSNLலில் 
நேரடி நியமனம் செய்யப்பட்ட TTA தோழர்களுக்கு
ஒரு கூடுதல் ஆண்டு உயர்த்தொகை வழங்கிட 
BSNL நிர்வாகம்  13/07/2015 அன்று  உத்திரவிட்டுள்ளது.

அந்த உத்திரவின்படி...


01/01/2007லில் இருந்து 07/05/2010 வரை 
பணியில் அமர்த்தப்பட்ட நேரடி நியமன  TTA  தோழர்களுக்கு 
அவர்களின் சம்பள இழப்பை சரிக்கட்டுவதற்காக
  ஒரு  கூடுதல் ஆண்டு  உயர்வுத்தொகை  வழங்கப்படும்.


 NE-9 சம்பள விகிதமான 13600-25420ல் 
அடிப்படைச் சம்பளமான  ரூ.13600/= உடன்
 ஒரு  கூடுதல் ஆண்டு  உயர்வுத்தொகை சேர்க்கப்பட்டு   
ரூ. 14010/=ல் சம்பள நிர்ணயம் செய்யப்படும்.


நிலுவைத்தொகை முழுமையான
 காலத்திற்கும் வழங்கப்படும்.

சில இடங்களில் TTA  தோழர்களின் சம்பள இழப்பை
 சரி செய்ய PERSONAL PAY வழங்கப்பட்டது. 
அத்தகைய தோழர்களுக்கு கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை வழங்கப்பட்டு PERSONAL PAY  சரி செய்யப்படும்.

மேற்கண்ட உத்திரவு 
இரண்டாவது ஊதியக்குழு அமுலாக்கத்தேதியான 01/01/2007 முதல் 
இரண்டாவது ஊதியக்குழு உத்திரவு தேதியான  07/05/2010 வரை 
பணி நியமனம் பெற்ற TTA தோழர்களுக்கு மட்டுமே பொருந்தும். 
மற்ற பதவிகளுக்குப் பொருந்தாது. 

07/05/2010ல் இருந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக
 இப்பிரச்சினையை விடாது பேசி தீர்வுக்கு வழி வகை செய்த 
நமது சங்கத்திற்கு  நன்றிகள் பல .

No comments:

Post a Comment