Friday 28 September 2018


அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்தம்

வேலையில்லாக் கொடுமை…
விஷம் போல் ஏறும் விலைவாசி…
சமூக நலத்திட்டங்களுக்கு வெட்டு…
கொடுமை நிறைந்த குத்தகை முறை…
குறைந்த கால வேலை முறை…
குறைந்தபட்ச ஊதியம் 18000 மறுப்பு…
தொழிலாளர் நலச்சட்டங்கள் அழிப்பு..
தொழிற்சங்க உரிமைகள் பறிப்பு…
பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு தொடர் விற்பனை…
பணமதிப்பிழப்பு என்னும் பைத்தியக்காரத்தனத்தால்
70 லட்சம் வேலை இழப்பு…
2.34 லட்சம் சிறுதொழிற்சாலைகள் மூடல்…
6 கோடி மக்களின் வாழ்வாதாரப்பாதிப்பு…

இன்னும் எண்ணற்ற
தொழிலாளர் விரோத… மக்கள் விரோத…
மத்திய அரசின் தரம் தாழ்ந்த கொள்கைகளைக் கண்டித்து
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து…
28/09/2018 - டெல்லி 
மத்திய தொழிற்சங்கங்களின் கருத்தரங்க முடிவின்படி...

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் முழுக்க
நாடு தழுவிய கருத்தரங்கங்கள்…

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்
வாயில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள்

டிசம்பர் 17 முதல் 22 வரை நாடுமுழுக்க
கண்டன ஆர்ப்பாட்டங்கள்

 08/01/2019 மற்றும் 09/01/2019
நாடு திணறும்
இரண்டு நாள் வேலைநிறுத்தம்

தோழர்களே… தயாராவீர்…
இப்போது இல்லையேல்…
இனி எப்போதுமில்லை…

No comments:

Post a Comment