Monday 3 September 2018


ஒளிவீசும் ஓய்வூதியர் நலச்சங்கம்

AIBSNLPWA ஓய்வூதியர் நலச்சங்கத்தின்
சிவகங்கை கிளை மாநாடு மற்றும் மாவட்டச்செயற்குழு
01/09/2018 அன்று சிவகங்கையில் சிறப்புடன் நடைபெற்றது.
அகில இந்திய துணைப்பொதுச்செயலர் தோழர்.அருணாச்சலம்,
மாநில துணைத்தலைவர் தோழர்.ஜெயச்சந்திரன்,
முன்னாள் மாநில உதவிச்செயலர் தோழர். நாகேஸ்வரன் மற்றும்
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சிவகங்கைக் கிளையின் 
தலைவராகத் தோழர்.M.இராமச்சந்திரன்,
செயலராகத் தோழர்.A.சந்திரன்,
பொருளராகத் தோழர்.S.நடராஜன்
ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கிளை உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற மூத்த தோழர்களை
ஒருசேரக் காண்பது மிக்க மகிழ்வான நிகழ்வாக அமைந்தது.
கிளை மாநாட்டில் அனைத்துக் கிளை உறுப்பினர்களும்
பொன்னாடை போர்த்தி மகிழ்விக்கப்பட்டனர்.
NFTE சங்கம் தவிர அனைத்து சங்கங்களும் இன்று
தங்களுக்கான ஓய்வூதியர்கள் அமைப்பைத் துவக்கிவிட்டனர்.

ஆயிரம் சங்கங்கள் வந்தாலும்..
ஒளிவீசும் ஆதவன் போல் AIBSNLPWA நலச்சங்கம் திகழ்கின்றது.
எனவேதான் காரைக்குடி மாவட்டத்தில்
மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 370ஐத் தாண்டி விட்டது…

AIBSNLPWA நலச்சங்கம்…
எண்ணிக்கையில் உயர்ந்து நிற்கின்றது…
எண்ணத்தில் உயர்ந்து நிற்கின்றது….
சிந்தனையில் உயர்ந்து நிற்கின்றது….
செயலில் உயர்ந்து நிற்கின்றது….

AIBSNLPWA நலச்சங்கம்…
மென்மேலும் வளர்ந்திட..
ஓய்வு பெற்ற மூத்தோர்களின்
ஊன்றுகோலாய் விளங்கிட…
உறுதுணையாய் திகழ்ந்திட..
நமது நல்வாழ்த்துக்கள்…

No comments:

Post a Comment