Tuesday 18 September 2018


செப்டம்பர் 19 – தியாகிகள் தினம் 

64000 ஊழியர்களுக்கு வேலைநீக்க கடிதம்
12000 ஊழியர்களுக்கு சிறைவாசம்…
8000 ஊழியர்கள் மேல் வழக்கு…
7000 ஊழியர்கள் தற்காலிகப் பணி நீக்கம்
4000 ஊழியர்கள் கட்டாய வேலைநீக்கம்..
17 ஊழியர்கள் துப்பாக்கி சூட்டில் மரணம்…

இது நடந்தது…
ஆங்கிலேய ஆட்சியில் அல்ல…
அருமை இந்திய ஆட்சியில்….
 ------------------------------------------------------------------------------------------------
1968 செப்டம்பர் 19
மத்திய அரசு ஊழியர்களின்
வரலாற்றுச் சிலிர்ப்பு மிக்கப் போராட்டம்…
  ------------------------------------------------------------------------------------------------
அன்று…
மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கை இதுதான்…

குறைந்த பட்ச ஊதியம்…
விலைவாசியை ஈடுகட்டுதல்…
வேலைநீக்கத்தை கைவிடுதல்…
ஒப்பந்த முறையை ஒழித்தல்….
விலைவாசிப்படியை அடிப்படைச்சம்பளத்துடன் இணைத்தல்..
பழிவாங்கப்பட்ட ஊழியர் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்தல்…
25 வருட சேவை முடித்தால் ஓய்வு என்ற நிலையைக் கைவிடுதல்…

மேற்கண்ட கோரிக்கைகளுக்காக
மத்திய அரசு ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப்போரின்
50வது நிறைவு தினத்தை… நினைவு கூர்வோம்…

அவர்களது கோரிக்கைகள்
இன்றும்… தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கைகளாகவே
இருக்கும் கொடுமை மாற்றுவோம்….

No comments:

Post a Comment