Saturday 26 June 2021

 சம்பளம் கோரி ஆர்ப்பாட்டம் 

உழைத்தவன் வியர்வை காயுமுன்னே

அவனது கூலி கொடுக்கப்பட வேண்டும்....

என்றார் நபிகள் நாயகம்...

ஆனால் இன்றோ BSNL நிறுவனத்தில்...

உழைத்தவன் வியர்வை காய்ந்து...

அவனது வயிறும் காய்ந்து...

அவனது கல்லறையும் காய்ந்தாலும்...

கூலிகள் உரிய நேரத்தில் கொடுக்கப்படுவதில்லை.

எனவே இந்த கொடுமைக்கு முடிவுகட்ட AUAB அனைத்து சங்க கூட்டமைப்பின் அறைகூவலுக்கிணங்க நாடுதழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்  மிக எழுச்சியாக நடந்தேறியுள்ளது.

காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் முன்பாகவும், இராமநாதபுரம் தொலைபேசி நிலையம் முன்பாகவும் 25/06/2021 அன்று மதிய உணவு வேளையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்குடியில் NFTE சார்பாக தோழர்.மாரி தலைமையில்

BSNLEU தோழர்.பூமிநாதன் முன்னிலை வகிக்க...

கண்டன ஆர்ப்பாட்டத்தை...

FNTO  மாவட்டச்செயலர் தோழர். முத்துக்குமரன் துவக்கி வைத்தார்.

SNEA சங்கத்தின் சார்பாக தோழர்.கிருஷ்ணசாமி

AIBSNLEA சங்கத்தின் சார்பாக தோழர். மோகன்தாஸ்...

AIGETOA சங்கத்தின் சார்பாக தோழர்.ராமநாதன்

SEWA BSNL சங்கத்தின் சார்பாக தோழர். சேகர்

BDPA ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக தோழர். மனோகரன்

AIBSNLPWA ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக தோழர். சுந்தர்ராஜன்

TMTCLU ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் சார்பாக தோழர். முருகன்

ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

NFTE கிளைச்செயலர் தோழர். ஆரோக்கியம் கோரிக்கை முழக்கங்கள் எழுப்ப தோழர்.சுரேஷ் நன்றி நவில ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.

இராமநாதபுரத்தில்...

NFTE கிளைத்தலைவர் தோழர். தமிழரசன் தலைமையேற்க...

AIBSNLPWA ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக தோழர் இராமமூர்த்தி...

NFTE  முன்னாள் கிளைச்செயலர் தோழர். இராமமூர்த்தி..

SNEA சங்கத்தின் சார்பாக தோழர்கள் தவசிமணி,

சரவணன், பாலகிருஷ்ணமீனாள் ஆகியோரும்...

கருத்துரை வழங்கினர்.

தோழர். சின்னவீரன் நன்றியுரைக்க ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.

No comments:

Post a Comment