Monday 14 June 2021

 BSNL பணத்தை DOTயே திருப்பிக்கொடு...

 BSNL நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கடந்த 20 மாதங்களாக உரிய நேரத்தில் சம்பளம் வழங்காததைச் சுட்டிக்காட்டியும் BSNL நிறுவனத்திற்கு DOT பல்வேறு காரணங்களுக்காக தரவேண்டிய ரூ.29,540/= கோடி ரூபாயை உடனடியாக வழங்கிடக்கோரியும் AIBSNLEA அதிகாரிகள் சங்கப் பொதுச்செயலர் தோழர்.சிவக்குமார் அவர்கள் DOTக்கு 14/06/2021 அன்று கடிதம் எழுதியுள்ளார். 

BSNL வங்கிகளிடம் கடன்பட்ட தொகை 24,000 கோடி என்றும் CAPEX, OPEX ,மற்றும் பல்வேறு செலவினங்களுக்காக BSNL ஏறத்தாழ 12,800/= கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது எனவும் தோழர் சிவக்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

மாதம் 400 கோடி அளவில் தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத நிலையில் உள்ள BSNL நிறுவனத்திற்கு DOT எந்தவித உதவியும் செய்யாமல்  பல ஆயிரம் கோடி நிலுவைகளை திருப்பித்தராமல் இழுத்தடிப்பது கண்டனத்திற்குரியது. அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து இதற்காக ஒன்றுபட்ட இயக்கத்தை உடனடியாக நடத்திட வேண்டும். உரிய நேரத்தில் எடுத்துரைத்த ... DOTஐ இடித்துரைத்த AIBSNLEA பொதுச்செயலர் தோழர் சிவக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment