Monday 29 December 2014

அப்பாடா...
தோழர்களே...
ஒரு வழியாக ERP மூலம் நிரந்தர ஊழியர்களின் 
டிசம்பர் மாத சம்பளம் செயல்முறைப்படுத்தப்பட்டுள்ளது. 
ஊழியர்களுடைய   டிசம்பர் மாத மொத்த சம்பளம், 
பிடித்தம் மற்றும் கையிருப்பு பணம் ஆகிய தகவல்கள் சம்பந்தப்பட்டவர்களுடைய அலைபேசிக்கு
குறுந்தகவலாக அனுப்பப்படும்.
இதில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் 
தோழர்கள் தகவல் தெரிவிக்கலாம். 
சம்பள பட்டுவாடா இன்றைக்கோ நாளைக்கோ நடந்தேறும்.
ஆனால்  இம்மாத GPF பட்டுவாடா..
சென்ற மாத ஒப்பந்த ஊழியர் சம்பள பட்டுவாடா
ஆகியவை இன்னும் தீர்க்கப்படவில்லை.
ஒரு சில மாவட்டங்களில் ஒப்பந்த ஊழியர்களுக்கு 
நவம்பர் மாதச்சம்பளம்  வழங்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தக்காரர்களின் வங்கி கணக்கு எண் மற்றும் 
வங்கி அடையாள எண் ஆகியவற்றில் நிகழும் குளறுபடிகளால் 
பில் பட்டுவாடாவில் தாமதம் ஏற்படுகின்றது. 
ஆரம்பக்கட்டம் என்பதால் 
இத்தகைய குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன என்றும் 
வரும் புத்தாண்டில் இவையெல்லாம் சரிசெய்யப்படும் என்றும்..
நம்பிக்கையுடன் நடக்கும் நாளைக் கழிப்போம்....

No comments:

Post a Comment