Wednesday 11 March 2015

செய்திகள்

இன்று 12/03/2015 கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 21&22
 வேலை நிறுத்த அறிவிப்புக்கடிதம் BSNL நிர்வாகத்திடம் அளிக்கப்படுகின்றது. அதனையொட்டி நாடு முழுக்க நமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
 கூட்டமைப்பு சார்பில் நடைபெறுகின்றது.
================================================================
நலிவடைந்த நிலையில் உள்ள 65 பொதுத்துறைகளில் 
5 பொதுத்துறைகளை மூடுவதற்கு அரசு உத்தேசித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் கனரக தொழில் அமைச்சர் கேள்வி நேரத்தில் கூறியுள்ளார். இவற்றில் MTNL, AIR INDIA மற்றும் HMT ஆகிய பிரபலமான நிறுவனங்களும் அடங்கும். ஏனைய நிறுவனங்கள் தொடர்ந்து நட்டத்தை சந்தித்து தொழில் வாய்ப்பை இழந்த நிலையில் சென்ற ஆண்டு லாபம் காட்டியுள்ள MTNL நிறுவனமும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது கேள்விக்குறியது. BSNL மற்றும் MTNL  இணைப்பிற்கான முன்னோட்டமாக இந்த அறிவிப்பு இருக்கலாம்.

 நேரு உருவாக்கி வைத்ததை மோடி மூடுவாராக...
==============================================================

26/02/2015 அன்று கூடிய BSNL BOARD வாரியகூட்டத்தில் 
DELOITTEE குழுவின் அறிக்கையை அமுல்படுத்த 
ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. 

 சேவை மேம்பாடு, NETWORK பேணுதலை தனியாருக்கு விடுதல், 
விற்பனை மற்றும் சந்தைப்பகுதியை விரிவு படுத்துதல்,
ஊழியர் எண்ணிக்கையை சரி செய்தல் மற்றும்
 திறமைக்கேற்ற வெகுமதி அளித்தல்
 போன்றவற்றை நடைமுறைப்படுத்த 
உரிய திட்டங்களை வகுக்கக்கோரி நிர்வாகக்குழுவை 
BSNL BOARD கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிகின்றது. 
ஏற்கனவே நிர்வாகம் DELOITTEE குழு பரிந்துரையால் 
ஊழியர்களுக்கு பாதிப்பு இருக்காது என உறுதி அளித்துள்ளது. 
உறுதிமொழியை நிர்வாகம்  உறுதியாக கடைப்பிடிக்குமா 
என்பது போகப்போக தெரியும்.
============================================================
TRAI  முடிவின்படி மார்ச் 2015 முதல் IUC கட்டணம் ஒழிக்கப்படுவதால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இலவச SIMக்கு 
தனியார் தொலைபேசியை அழைப்பதற்கான வசதி தரப்பட வேண்டும் 
என  நமது மத்திய சங்கம் நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
============================================================

No comments:

Post a Comment