Thursday 26 March 2015

 தகவல் தொழில் நுட்பச்சட்டம் 66(A )

காலாவதியானது கைப்பூட்டுச்சட்டம் 

இந்தியத் தகவல் தொழில் நுட்பச்சட்டம் பிரிவு 66(A ) 
2008ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

இப்பிரிவின் கீழ்..
இணைய தளங்களில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் 
  • ஒருவரது மனதைப் புண்படுத்துகிறது 
  • தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது...
  • அவமானப்படுத்துகிறது...
என்று ஒருவர் புகார் அளித்தால் இணையதளங்களில் கருத்துக்கள் வெளியிட்டவர்களைக் கைது  செய்ய மேற்கண்ட சட்டம் வழிவகுத்தது..

அந்த சட்டத்தின் கீழ்...
  • பால் தாக்கரே மரணத்தின்போது கருத்துக்கள் வெளியிட்டதற்காக இரண்டு பெண்கள் மும்பையில் கைது செய்யப்பட்டனர்...
  • உத்திரப்பிரதேசத்தில் அமைச்சர் ஆசம்கான் என்பவரைப்பற்றி கருத்து வெளியிட்டதற்காக 12ம் வகுப்பு படிக்கும் சிறுவன் கைது செய்யப்பட்டான்.
இது போல் பல்வேறு சம்பவங்கள் 
நமது பெருமைமிகு.. பொறுமைமிகு.. 
பாரத தேசத்தில் நடந்தேறின. 
இந்த கைப்பூட்டுச்சட்டத்தை எதிர்த்து 
பல்வேறு தோழர்கள் வழக்குத் தொடர்ந்தனர். 

தற்போது இந்த சட்டத்தை ரத்து செய்து 
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
நீதிபதிகள் செலமேஸ்வர் மற்றும் நாரிமன் 
ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர். 
மேற்கண்ட சட்டம் கருத்துச் சுதந்திரத்துக்கு
முற்றிலும் எதிரானது என நீதிபதிகள் கூறியுள்ளனர். 

  • மன அமைதி கெடுகிறது
  • எரிச்சல் உண்டாகிறது 
  • தர்ம சங்கடமானது 
  • ஆட்சேபகரமானது 
என்ற வார்த்தைகளைக் கூறி ஒருவரைக் கைது செய்வது முற்றிலும் ஜனநாய விரோத செயல் என்றும் காவல்துறை இதைக் கையில் எடுத்துக்கொண்டு தனிமனிதர்களை தங்கள் விருப்பம் போல் கைது செய்ய வழி வகுக்கும் என்றும்  அவர்கள் கூறியுள்ளார்கள்.

இன்று இளைய தலைமுறையினர்தான் இணைய தளங்களை முற்றிலும் பயன்படுத்துகின்றனர்.  மேற்கண்ட சட்டம் அடுத்த தலைமுறையை அடக்கி வைப்பதற்கான செயலாக இருந்தது...

மேற்கண்ட தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் 
கருத்துச் சுதந்திரத்தின் கைவிலங்கை ஒடித்துள்ளது...
இளைய தலைமுறையின் 
கருத்துப் பூங்காவை 
கருப்பு வெள்ளாடுகள் 
காலி செய்ய விடாமல் வேலி போட்டுள்ளது...
நமது வாழ்த்துக்கள்..

இந்த நேரத்தில்...
காரைக்குடி NFTE மாவட்டச்செயலர் 
தனது இணையதளத்தில் 
  • ஆட்சேபகரமான 
  • எரிச்சல் உண்டாகிற 
  • தர்மசங்கடமான 
  • மனதைப் புண்படுத்துகிற 
கருத்துக்களை வெளியிடுகிறார். 
அவரை அடக்கி வைக்கவும் என 
நமது மாநில நிர்வாகம்...
இந்திய தேசத்தின் 
இறையாண்மையைக் காப்பாற்றிட..
இரண்டு எச்சரிக்கைக் கடிதங்களை 
நமது மாநிலச்செயலருக்கு.. 
அடுத்தடுத்துக் கொடுத்ததையும்..
நாம் அன்புடன்  நினைவு கூர்கின்றோம்...

வாழ்க... ஜனநாயகம்..
வளர்க... கருத்துச் சுதந்திரம்...

1 comment:

  1. ஒரு மாரியை மாற்ற நினைத்தால் ஓராயிரம் மாரிகள் மாறி ,மாறி முளைப்பார்கள் என நிர்வாகத்திற்கு உணர்த்துவோம் தோழரே நன்றி

    ReplyDelete