Friday 27 March 2015

சீரோடும்.. சிறப்போடும்.. வாழட்டும்..
சீனா.. தானா.. 
பணி நிறைவு நாள் 31/03/2015

தோழர்.சிவசிதம்பரம்
பட்டுக்கோட்டை

அறுபதிலும் இளமை.. 
ஆரம்பம் முதல் இனிமை... 
அதுதான்  சிவ சிதம்பர ரகசியம்.. 

பட்டுக்கோட்டையின் கட்டுத்தறி அவர் 
பாட்டாளி வர்க்க  கலைவாணர் அவர்...

களை கட்டிய மனிதர் அவர்..
களைகளையும்.. அன்போடு..
கட்டிக்கொள்ளும் தோழர் அவர் ...

கூட்டு  உறவில் நாட்டம் கொண்டவர்..
கூட்டுறவிலும் நன்மை செய்தவர்..
கூடி வாழ்ந்தால்  கோடி நன்மை...
கொள்கை  கொண்டவர்..

இளகிய இதயம் கொண்டவர்...
இலக்கியத்தில் ஈடு கொண்டவர் ...
இதயம் அறுபட்டாலும்.. 
இயக்கத்தொடர்பு  அறுபடாதவர்..

செங்கொடியை நேசித்தவர்..
ஜெகனை  சுவாசித்தவர்..
குப்தாவை நித்தமும் பூஜித்தவர்..

செங்கொடியும் வீரமும் போல்.. 
ஜெகனும் அன்பும் போல்... 
குப்தாவும் தியாகமும் போல்.. 
நெடிய காலம் நீடுழி வாழ்க...

No comments:

Post a Comment