Friday 29 October 2021

 AUAB மற்றும் இயக்குநர்கள் 

கூட்ட முடிவுகள்

 

27/10/2021 அன்று டெல்லியில் AUAB

அனைத்து சங்கத்தலைவர்கள் மற்றும்

BSNL வாரிய இயக்குநர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்ட முடிவுகளை BSNL நிர்வாகம்  

இன்று 29/10/2021 கடிதமாக வெளியிட்டுள்ளது.

BSNL நிர்வாகம் இதுவரை AUAB

கோரிக்கைகளை செவிமடுப்பதில்லை.

போராட்டம் என்றால் மிரட்டல் தொனியில்

கடிதங்களை வெளியிடும்.

ஊழியர் கோரிக்கை.... நிறுவன வளர்ச்சி

சம்பந்தமான கோரிக்கைகளைப் பற்றி

நாம் குரல் எழுப்பியபோது கண்டுகொள்ளாத

BSNL நிர்வாகம் CMDஐ மாற்று என்று

குரல் எழுப்பிய பின்புதான்

அசையாத  CMD சற்றே அசைந்துள்ளார்.

அடிமேல் அடி அடித்தால்  CMDயும் நகருவார்.

இது ஒரு மாற்றம்.... முன்னேற்றம். 

27/10/2021 கூட்ட முடிவுகள் 

உரிய தேதியில் சம்பளம் வழங்குதல் 

செப்டம்பர் மாதச்சம்பளம் 11/10/2021 அன்று வழங்கப்பட்டது.

அக்டோபர் மாதச்சம்பளம் தீபாவளிக்கு முன்பாக வழங்கப்படும்.

நவம்பர் மாதச்சம்பளம் 30/11/2021 அன்று வழங்கப்படும்.

டிசம்பர் மாதம் வங்கிக் கடன் கட்ட வேண்டியிருப்பதால்

சம்பளப்பட்டுவாடா தாமதாம் ஆகலாம்.

ஜனவரி மாதச்சம்பளம் 31/01/2022 அன்று வழங்கப்படும்.

2022 முதல் சம்பளப்பட்டுவாடா முறைப்படுத்தப்படும்.

 

3வது ஊதிய மாற்றம் 

ஊதிய பேச்சுவார்த்தைக்குழு

மாற்றியமைக்கப்படவுள்ளது.

தீபாவளிக்கு பின்பு கூட்டம் நடைபெறும்.

அனைத்துக் கேடர்களிலும் ஊழியர்கள்

STAGNATION என்னும் தேக்கநிலையால்

மிகுந்த பாதிப்புக்குள்ளாவதால்

ஊதிய பலன் இல்லாத ZERO FITMENT

ஊதிய மாற்றத்திற்கு சங்கங்கள்

இசைவு தெரிவித்துள்ளன. 

 

சீரமைப்புக்கு முன்பாக பதவி உயர்வு 

கேடர்களை சீரமைப்பு செய்வது குறித்து

BSNL வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

அது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். 


போராட்டக்காலத்திற்கான குற்றப்பத்திரிக்கை 

போராட்டங்களில் ஈடுபட்டதற்காக

அதிகாரிகள் சங்கத் தலைவர்களுக்கு  

விதி FR-17(a) குற்றப்பத்திரிக்கை அளிக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற தோழர்களின்

பணப்பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது ஓய்வு பெற்ற அதிகாரிகள் மீதான

குற்றப்பத்திரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகின்றது.

பணியில் உள்ள அதிகாரிகள் மீதான

குற்றப்பத்திரிக்கையை விலக்கிக் கொள்வது பற்றி மனிதவள இயக்குநர் உறுதி அளித்துள்ளார். 


ஊழியர்களுக்கான இலாக்காத் தேர்வுகள் 

நவம்பர் 30 அன்று இலாக்காத் தேர்வுகள்

பற்றிய பொது அறிவிப்பு வெளியிடப்படும்.

இட ஒதுக்கீடு மற்றும் காலியிடங்கள் பற்றிய

இறுதி கணக்கீட்டிற்குப் பின்பு

விரிவான அறிவிப்பு வெளியிடப்படும். 


மாற்றல் கொள்கையில் தளர்வு 

விதி 9 மாற்றல் கொள்கை

ஊழியர்களுக்குப் பாதகமாக இருப்பதாக

சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளதால்

இது பற்றி ஆராய குழு ஒன்று அமைக்கப்படுகின்றது.

நிர்வாகத்தரப்பில் மூன்று அதிகாரிகளும்,

அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் சார்பாக

நான்கு உறுப்பினர்களும் குழுவில் இடம் பெறுவார்கள். 


போராட்டங்களுக்கு எதிரான பூச்சாண்டி கடிதங்கள் 

தர்ணா... உண்ணாவிரதம் போன்ற

அதிபயங்கரப் போராட்டங்களில் சங்கங்கள் ஈடுபடும்போது

நிர்வாகம் மிகவும் கடுமையாக அதனை எதிர்கொள்கிறது.

இது சரியான அணுகுமுறையல்ல என்று

சங்கங்கள் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில்

சேவைப்புத்தகம் மற்றும் ERPயில் பொறிக்கப்பட்ட

குற்றச்சாட்டுக்களை நீக்குவது பற்றி

மனிதவள இயக்குநர் உறுதி அளித்துள்ளார். 


நேரடி ஊழியர்களின் ஓய்வூதியப்பங்களிப்பு

ஏப்ரல் 2020 முதல் BSNL நேரடி நியமன ஊழியர்களின்

ஓய்வூதியபங்களிப்பை நிர்வாகம் செலுத்தவில்லை.

பணியில் உள்ள ஊழியர்கள் மாதாமாதம் சம்பளம்

கேட்பதால் தங்களால் மேற்கண்ட பங்களிப்பை

செலுத்த இயலவில்லை என்றும்...

31/03/2022க்குள் எப்பாடு பட்டாவது

ஓய்வூதியப்பங்களிப்பு செலுத்தப்படும் என்றும்

BSNL நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

 

நிர்வாகம் வெளியிட்ட 29/10/2021 கடிதம்....

வெற்றுக்கடிதமா? வெற்றிக்கடிதமா?

என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும்...

No comments:

Post a Comment