Monday 15 April 2013


வெற்றி கொண்ட கரத்தினாய்  

வா...வா...வா


எங்கு சென்றாய்? .. பாரதி 
எட்டாண்டு காலமாய் 
தாழ்வுற்று தறிகெட்டு 
பாழ்பட்டு நிற்கின்றோம்..  பாரதி 

எங்கள் ஆநிரை  
அத்தனையும் கவர்ந்து போயினர் பகைவர்கள் 
ஏப்ரல் 16ல் நடக்கும் மீட்சிப்போரில் 
தர்மம் வெற்றி பெற வாழ்த்திடு! பாரதி..
எங்கு சென்றாய் பாரதி..

வந்தேனடா.. தம்பி!  
வாட்டம்  ஏனடா?
என்பால் ஈர்ப்பு கொண்ட
NFTEஐ  நன்கு  அறிவேனடா.. 

அதர்மம்  வெல்லாதடா..
இனி செல்லாதடா...


வஞ்சகரை போ..போ.. என தூற்றி 
பிறர் வாழ நினைப்போரை  வா வா என போற்றி 
ஏட்டிலே எத்தனையோ  
எழுதி வைத்தேனடா..  
எடுத்துக்கொள் தம்பி..
எடுத்துக்கொல்  தம்பி..

இலங்கைத்தமிழர்  படும் 
இன்னல் கண்டு  மனம் நொந்தேனடா.. 
இன்னும் ஒரு முறை இலங்கை எரித்திட... 
அனுமன் தேடி நானும் அலைகின்றேனடா...

வெற்றி உனதடா..
ஜெயபேரிகை கொட்டடா.. 

நன்றி..  பாரதி.. 
இதோ ... நீ சொன்ன  போ..போ.. வா..வா 
---------------------------------------------------------------
எட்டாண்டு காலம் இருள் சேர்த்த 
BSNLEUவே... போ..போ..போ..

வலிமையற்ற தோளினாய் போ போ போ
பொலிவிலா  முகத்தினாய் போ போ  போ
ஒலியிழந்த குரலினாய் போ போ போ 
கிலி பிடித்த நெஞ்சினாய் போ போ போ 
பொய்யெல்லாம் மெய்யாக போற்றுவாய் போ போ போ 
மெய்யெல்லாம் பொய்யாக விழி மயங்குவாய் போ போ போ 
மாறு பட்ட வாதம் வாயில் நீள ஓதுவாய் போ போ போ 
தீது செய்ய அஞ்சிலாய் போ போ போ 
தீமை கண்டு ஓடுவாய் போ போ போ  
சோதி மிக்க BSNLலில் காலத்தால் 
சூழ்ந்த மாசுவே  போ போ போ 

-------------------------------------------------------------------------------------------------
என்றும் மங்கா  NFTEயே 
...வா...வா...வா

ஒளி படைத்த கண்ணினாய் வா...வா...வா
ஒளியிழந்த நாட்டிலே ஒளி ஞாயிறாய் வா...வா...வா
எளிமை கண்டு  இரங்குவாய் வா...வா...வா
ஏறு  போல் நடையினாய் வா...வா...வா...
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா...வா...வா
களையிழந்த நாட்டிலே கலைசிறக்க வா...வா...வா
கருதியது இயற்றுவாய் வா...வா...வா
தெளிவு பெற்ற மதியினாய்  வா...வா...வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா...வா...வா
பொய்மை கூற அஞ்சுவாய்  வா...வா...வா
வெற்றி கொண்டகரத்தினாய்   வா...வா...வா


ஆஹா.. பாரதி... 

கரங்கள் வெற்றி கொள்ளும் என்ற 
உன் வாக்கு மெய்ப்படட்டும் ...

இணைந்த கரங்கள் வெல்லட்டும்..

இருண்ட காலம் முடியட்டும்...








No comments:

Post a Comment