Thursday 2 May 2013


சரப்ஜித்சிங்
ஓர்  எல்லை மீறல்..


"யாதும் ஊரே.. யாவரும் கேளீ ர்.."
என்றார் கணியன் பூங்குன்றனார்.

ஆனால்.. ஊர் விட்டு ஊர்
பாக்கிஸ்தான் எல்லையை தாண்டிய  குற்றத்திற்காக
22 ஆண்டுகள் கேட்பாரற்று 
பாக்கிஸ்தான் சிறையில் அடைபட்டு..அவதிப்பட்டு  
இறுதியில் சக கைதிகளிடம் அடிபட்டு  மிதிபட்டு
உயிர் நீத்த சரப்ஜித்சிங் மரணம் கேட்டு
கனக்குது நமது  மனம்..

சரப்ஜித்சிங் செய்தது 
மண்ணில் எல்லை மீறியது..

பாக்கிஸ்தான் செய்ததோ..
மனிதத்தில் எல்லை மீறியது...

முறையான நீதி..
தனிமனித உரிமை..
கைதிகளுக்கு பாதுகாப்பு.. 
அண்டை நாட்டுடன் நல்லுறவு..
என்ற அனைத்து எல்லைகளும் மீறப்பட்டுள்ளது..

இந்தியாவின் இயலாமைக்கு.. முயலாமைக்கு  
இதுவும் ஒரு சான்று ..




1 comment:

  1. என்ன கொடுமை இதுதான் இந்தியன் நிலைமை மீண்டும் ஓர் சுதந்திர போரட்டத்திற்கு தயாராக வேண்டும்.

    ReplyDelete