Wednesday 1 May 2013



மாமதுரை

வைகையில் வெள்ளம் 
எப்போதேனும் பெருக்கெடுக்கும்.. 

மதுரை கூட்டுறவு சங்கத்திலோ 
எப்போதும் பெருக்கெடுத்து ஓடியது 
ஊழல் வெள்ளம்....

பரியை நரியாக்கினார்கள் 
நரியை பரியாக்கினார்கள் 
மொத்தத்தில் ஊழியரை  ஏமாளியாக்கினார்கள்..

மாபெரும் நிகழ்வுகள் நிகழ்ந்தது மதுரை.. 
மாபெரும் செயல்கள் புரிந்தது மதுரை.. 
எனவே அதற்கு மாமதுரை எனப்பெயர் உண்டு..

அதன் வழியில்..
மதுரை தொலைத்தொடர்பில் மாபெரும் நிகழ்வாக 
கூட்டுறவு நாணயச்சங்கம் நாணயமிக்க 
நமது கூட்டணியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

இன்று.. 11 இடங்களில்..
9 இடங்களை வென்றுள்ளது 
9 கரங்களின் தலைமையிலான கூட்டணி..

நமது கூட்டணி..
நியாயம் நேர்மை கொண்டு 
கூட்டுறவை வலுப்படுத்தட்டும் 

நீதி உரைத்த மாமதுரையில்...
நிமிர்ந்து பறக்கட்டும்..
நேர்மையின்.. மீன் கொடி.. 

No comments:

Post a Comment