Thursday 22 October 2015

AIBSNLPWA 
78.2 -  ஆர்ப்பாட்டம் 

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் 
பேணித் தமராக் கொளல்...

மூத்தவர்களைப்  பேணுதல்.. 
அவர்களது தேவைகளை நிறைவேற்றுதல் 
அவர்களைத் தன் வசப்படுத்துதல்..
ஆகிய செயல்கள் ..
அரிய செயல்களுள் அரியது.. 
என்றார் வள்ளுவர்..

ஆனால் BSNLலில்..
மூத்த குடிமக்களின் 
நீண்ட நாள் கோரிக்கையான 
78.2 சத IDA  இணைப்பு 
28 மாதங்கள் ஆகியும் 
இன்னும் அமுல்படுத்தப்படவில்லை...

விளக்கங்கள் கேட்டே 
காலங்கள்  வீணாக்கப்படுகிறது...
மூன்று அமைச்சகங்கள் 
ஒப்புதல் அளித்த பின்னும் 
நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை..
நிதி அமைச்சகம் 
DOTயிடம் கேட்கப்பட்ட   சில கேள்விகளுக்கு 
விளக்கங்கள் இன்னும் கொடுக்கப்படவில்லை..

எனவே இந்த கால தாமத்தைக் கண்டித்து 
 78.2 சத IDA  இணைப்பை 
உடனடியாக அமுல்படுத்தக்கோரி 
AIBSNLPWA   - அகில இந்திய ஓய்வூதியர்கள் சங்கம் 


நவம்பர் 5 அன்று 
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 

நடத்த அறைகூவல் விடுத்துள்ளது.
நமது மூத்தோர்களுக்கு 
நம் ஆதரவை நல்கிடுவோம்...

காற்றுள்ள போதே...தூற்றிக்கொள் என்பது பழமொழி..
நமது ஓய்வு பெற்ற மூத்த தோழர்களின் 
நீண்ட நாள் கோரிக்கையான 78.2சத இணைப்பு ..
அவர்களின்  மூச்சுக்காற்று உள்ளபோதே..
நிறைவேறிட வேண்டும்...
மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும்..
இதுவே நமது எதிர்பார்ப்பு...

No comments:

Post a Comment