Friday 30 October 2015


ERP  அமுலாக்கத்திற்குப் பின் 
ஓய்வு பெற்ற தோழர்களுக்கும், 
மரணமுற்ற தோழர்களுக்கும் 
விடுப்புச்சம்பளம்  - LEAVE ENCASHMENT 
வழங்குவதில் மிகுந்த தாமதம் நிலவியது.  

JCM தேசியக்குழுவில் இப்பிரச்சினை விவாதிக்கப்பட்டது. 
அதனடிப்படையில் அக்டோபர் 2015ல்  இருந்து
ஊழியர்கள் ஓய்வு பெறும் மாதமே விடுப்புச்சம்பளத்தை வழங்க வேண்டும் என CORPORATE  அலுவலகம் உத்திரவிட்டிருந்தது.

இம்மாதம் ஓய்வு பெற்ற தோழர்களுக்கும், 
மரணமுற்ற ஊழியர்களின் வாரிசுகளுக்கும் 
விடுப்புச்சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
மத்திய, மாநில சங்கங்களுக்கும் 
மத்திய மாநில நிர்வாகங்களுக்கும் 
நமது நன்றி உரித்தாகுக.

என்னதான் உத்திரவுகள் மேலிருந்து இடப்பட்டாலும்... 
அதை நடைமுறைப்படுத்துவது தலமட்ட அதிகாரிகள்தான்.
அந்த வகையில்...
கடமை உணர்வோடு செயல்பட்டு
விடுப்புச்சம்பளம் இம்மாதமே கிடைப்பதற்கு பணி செய்த 
கணக்கு அதிகாரி அன்புத்தோழர்.சொக்கலிங்கம்  
அவர்களுக்கும் நமது நன்றிகள் பல...
---------------------------------------------------------------------------------------------------------------------

தோழர்களே...
இணைய தளத்தில்...
ஊழியர்களின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவது.. 
துயர் தீருவதற்கேயல்லால் ...
பெயர்  வாங்குவதற்கு அல்ல...

துயரங்களையும், தவறுகளையும்  சுட்டிக்காட்டுபவன்.. 
பேர் என்றும் ரிப்பேர்  என்பது  நாமறிந்ததே...

No comments:

Post a Comment