Monday 7 March 2016

மார்ச் 8மகளிர் தினம் 
உறக்கத்திலும் விழித்திரு..
சதி என்னும் நெருப்புக்கு இரையானாள்..
சதிமாதா என்னும் இறையானாள்..

படைத்தவனுக்கு சேவை செய்து இறையானாள்...
பசி படைத்தவனுக்கு  தாசியாகி  இரையானாள்...

பால்ய விவாக சதியால்  சதியானாள்...
பால் வடியும் பருவத்தில் பலியானாள்...

இந்த தேசத்தில்... இந்திய தேசத்தில்...
பெண்கள்...பட்ட துன்பங்கள்..
ஒன்றா.. இரண்டா..

பெண்களைத் தெய்வம் என்று சொல்வார்கள்...
நம்பி  தெருவிலே தனியே நடந்து விட்டால்..
அந்த தெய்வத்துக்கே..
அடுக்காத செயலைச் செய்வார்கள்...


இது கலாம் கனவு கண்ட 
வல்லரசு தேசமல்ல...
வல்லூறுகளின் தேசம்...
வல்லுறவுகளின் தேசம்...

பெண்ணே...
என்றும் நீ விழித்திரு..
எப்போதும் நீ விழித்திரு...
உறக்கத்திலும் கூட...

அனைவருக்கும் 
மகளிர் தின வாழ்த்துக்கள் 

No comments:

Post a Comment