Sunday 21 August 2016

நேர்மையின் இமயம்..
தோழர்.ஜீவா 

மதுரையிலே மாநாடு...
சிறப்பாக நடத்தி முடிக்கிறார் ஜீவா...
மறுநாள் தோழர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே 
மயங்கி விழுகிறார்... காரணம் பட்டினி...
தோழர்கள் மயக்கத்தைத் தெளிவிக்கின்றனர்...
அப்போது... மாநாட்டுக்குப் பந்தல் போட்டவர் வந்து நிற்கிறார்...
தன் அரைக்கால் சட்டைப்பையிலிருந்து...
பணத்தை எடுத்து பந்தல் போட்ட தோழரிடம் நீட்டுகிறார்... ஜீவா...

" இந்தப் பணத்தில் நீங்கள் சாப்பிட்டிருக்கலாமே?
பணத்தை வைத்துக்கொண்டே  பட்டினி கிடந்தது சரியா?
என தோழர்கள் கோபம் கலந்த பாசத்துடன் கேட்கின்றனர்...

"இது... என் பணம் அல்ல... கட்சியின் பணம்...
இது சாப்பிடுவதற்கு அல்ல... சரியான இடத்தில் சேர்ப்பதற்கு"...
என்று ஜீவா அமைதியாகச் சொல்கிறார்...

இதுதான் ஜீவா...

இன்றும் இயக்கங்கள் உள்ளன...
மாநாடுகளும் ஆடம்பரமாக  நடக்கின்றன...
தலைவர்களும் மயக்கத்திற்கு ஆளாகின்றனர்... 
ஆனால் பசி  மயக்கத்தால்  அல்ல...
உண்ட மயக்கத்தால்...

இன்று  ஜீவா...  இல்லை... 
தலைவர்களிடம்... 
நேர்மை என்னும் ஜீவன் இல்லை...

நேர்மையின் அகரமாய்...
நேர்மையின்  சிகரமாய்...
இன்றும்.. என்றும்.. 
நேர்மையாளர்கள் நெஞ்சில் வாழும்.. 
தோழர்  ஜீவாவின் புகழ் போற்றுவோம்.... 

ஆகஸ்ட்..21...
தோழர்.ஜீவா பிறந்த நாள்...

No comments:

Post a Comment