Tuesday 30 August 2016

மண்ணின் மைந்தன்..
துணைப்பொதுமேலாளர்  - நிர்வாகம்
திரு.
S.ஜெயச்சந்திரன் - DGM
காரைக்குடி.
வெற்றித்திருமகன்
வெற்றிடத்தை நிரப்பிய தலைமகன்..

வரப்பிலே பிறந்தவன்… 
வரம்பிலே வாழ்பவன்

சேது மண்ணிலே வளர்ந்தவன்… 
செட்டிநாட்டிலே வசிப்பவன்..

அறிவிலே சிறந்தவன்… 
அறிவியலில் பயின்றவன்

உயரத்திற்கு சென்றவன்… 
உள்வேர்களை மறக்காதவன்

நடப்புக்களை அறிந்தவன்… 
நட்புக்களை மதிப்பவன்… 
         
நுட்பத்திலே தேர்ந்தவன்… 
வெப்பத்திலும் வியர்க்காதவன்

நிதானத்தை நிர்வகித்தவன்… 
நிர்வாகத்தில் நிதானித்தவன்

கடமையில் கருத்தானவன்… 
கண்ணியத்தில் நிறைவானவன்

சங்கத்தில் பற்றானவன்… 
சமரசத்தில் உற்றானவன்

சேவையை வளர்த்தவன்… 
தொழிலாளர் தேவையைப் புரிந்தவன்

எல்லோருக்கும் நல்லவன்… 
பொல்லாருக்கும் இனியவன்

நாரை பறக்காத 48 மடைகளின்
நரை பார்க்காத இளைஞன்

நிறைவான பணி செய்து 
நிறைவு பெறும் சகோதரன்

நலமுடன் வாழவளமுடன் வாழ..
வாழ்த்துகின்றோம்நெஞ்சார… 
------------------------------------------------------------------------------------------

இன்று 31/08/2016 பணி நிறைவு பெறும் 
அன்புத்தோழர் - அன்புச்சகோதரர் 
AIBSNLOA  மத்திய சங்க செயற்குழு உறுப்பினர் 
தோழர்.S.ஜெயச்சந்திரன் - DGM
அவர்களின் பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்.

அன்பு  வாழ்த்துக்களுடன்...
காரைக்குடி மாவட்டச்சங்கம் 

வாழ்த்துச்சொல்ல - 9486102077

No comments:

Post a Comment