Wednesday 24 August 2016

ஓய்வின்றி உழைக்கும்...
ஓய்வுகளுக்கு வாழ்த்துக்கள் 
AIBSNLPWA
மாநிலச்செயலர்
தோழர்.முத்தியாலு 

AIBSNLPWA
மாநில உதவிச்செயலர்
தோழர். நாகேஸ்வரன் 

கோவையில் ஆகஸ்ட் 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெற்ற 
AIBSNLPWA  ஓய்வூதியர் நலச்சங்கத்தின் மாநில மாநாட்டில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 
புதிய நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துக்கள்.

மாநிலத்தலைவர் : தோழர். இராமாராவ்
மாநிலச்செயலர் : தோழர்.முத்தியாலு 
மாநிலப்பொருளர் : தோழர்.கௌஸ் பாஷா

காரைக்குடி NFTE முன்னாள் மாவட்டச்செயலர் 
தோழர்.நாகேஸ்வரன் அவர்கள் 
மாநில உதவிச்செயலராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மிக நீண்ட தொழிற்சங்க அனுபவமும், 
மாறாத கொள்கைப்பிடிப்பும், 
நெஞ்சம் நிமிர்ந்த நேர்மையும், 
கேட்போர் தகைக்கும் நாநயமும்,
 மாசற்ற நாணயமும் கொண்டவர்
அருமைத்தோழர் நாகேஸ்வரன் அவர்கள்.
  
 தோழர்.ஜெகன் அவர்களுக்குப்பின்  
தமிழகத்தில் முழக்கங்கள் எழுப்புவதில் 
முத்திரை பதித்தவர் தோழர்.நாகேஸ்வரன். 

இத்தனை சிறப்புகள் இருந்தும் 
NFTE இயக்கத்தில் ஒரு முறை கூட 
மாநிலச்சங்கப் பொறுப்பிற்குஅவர் 
தேர்வு செய்யப்படாதது விந்தையான ஒன்று. 

ஆனால்  ஓய்வூதியர் சங்கம் அவருக்கு உரிய இடமளித்து அவரை மாநிலச்சங்க நிர்வாகியாகத் தேர்வு செய்தமைக்கு  காரைக்குடி மாவட்டச்சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.

3 comments:

  1. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வாழ்த்துகள்

    Reply

    ReplyDelete
  3. நாகேஸ்வரன் என்ன தஞ்சாவூர்காரரா? அவர் இராமநாதபுரத்துக்காரர் அதுவும் காரைக்குடி SSAகாரர். அப்படி இருக்கும் போது தமிழ் மாநில NFTE சங்கத்தில் பதவி எப்படி கிடைக்கும்? தஞ்சை குடுமிகளுக்கு மட்டும் தான் தலைமை பதவி என்பது இங்கு எழுதப் படாத சட்டம், இடது சாரி கொள்கை என்பது எள் அளவு கூட எதிர் பார்க்க முடியாத ஒன்று. சமுத்திர ஊர்காரருக்கு தெரியுமோ தெரியாதோ கூட்டு உறவு கொடுத்ததாக செய்தி சொன்னதே பழைய அஞ்சா நெஞ்சர்அழகிரி என்பது.நன்கொடைகள் அனைத்து மாவட்டத் தோழர்களும் சேர்ந்துகொடுத்த போது ஒரு ஊர் காரர்கள் மட்டும் கொடுத்ததாக முதல் பக்க அறிக்கை, நேரில் கேட்க காரையுடன் மோதியவருக்கு கம்யூனிச தெம்பும் திரானியும் உண்டா?
    விடையைத் தேடும் காரைக்குடி மாவட்டத் தலைவர்

    ReplyDelete