Tuesday 23 August 2016

தீ விபத்து...

நேற்று 23/08/2016 மதியம் இராமநாதபுரத்தில் 
மின்னல் தாக்கியதால் MBM  தொலைபேசி நிலையம்   
தீப்பற்றி எரிந்து கருவிகள் முற்றிலுமாக   சேதமாகின. 
தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயணைத்தனர். 
நமது சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இடி... மின்னல் போன்ற இயற்கை நிகழ்வுகளை
  நம்மால் தடுத்து நிறுத்த இயலாது. 
அதே நேரம் பாதுகாப்பு வழிமுறைகள் உரிய
 கவனத்துடன் பின்பற்றப்படவில்லை என்பதுவும், 
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அசட்டைத்தனமும் காரணம்  
என்பதுவும்   இராமநாதபுரம் தோழர்களின் வருத்தமாகும். 

ஒரு சிறிய மாவட்டத்தில் 
மிகப்பெரிய பொருள் இழப்பும்... 
வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது 
நமக்கு மிகப்பெரிய கவலையாகும். 

முன்னை இட்ட தீ முப்புரத்திலே...
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே..
என்ற பட்டினத்தாரின் பாடல் வரிகள்  போல்...
நமக்கு  உணவளிக்கும் அன்னை போன்ற 
இந்த நிறுவனத்தில் மூண்ட தீயை  
நம் அடிவயிற்றில் மூண்ட தீயாகவே உணர்கிறோம்.

வருங்காலங்களிலாவது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
 பின்பற்றப்பட வேண்டும் என்பதுவே நமது வேண்டுகோள்.

No comments:

Post a Comment