Friday 16 December 2016

பாங்குடன் நடந்த பாரதி விழா...




தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம்...
NFTE தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்...
AIBSNLPWA ஓய்வூதியர்கள் சங்கம்...
NFTCL ஒப்பந்த ஊழியர்கள் சங்கம்...

கரம் கோர்த்தன... களிப்புடனே... 
காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில்...
காலத்தை வென்ற மகாகவி பாரதியின் 
பிறந்த நாளை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்ந்தன...

முன்னாள் காவல்துறை அதிகாரி பேனா மனோகரன் கவி பாட...
ஆசிரியர் ஜோல்னா ஜவஹர் கருத்தரங்கத் தலைமையேற்க...
கருத்தாழமிக்க உரைகளை கல்லூரி மாணவர்கள்... 
கரவொலிக்கிடையில் கணீர் குரலில் கருத்துரைக்க...
எழுத்தாளர் சந்திரகாந்தன் ஏற்றமிகு கருத்துக்களை எடுத்தியம்ப...
இலக்கியச் செம்மல் கோவி ஜெயராமன்...
கம்பனையும் பாரதியையும் வள்ளலாரையும் கலந்து 
ஆழமான கருத்துக்களை அற்புதமாக எடுத்துரைக்க...
மதி நுட்பப் பேச்சாளர் தோழர் மதிவாணன்...
சரவெடியாய் அரசியல் கருத்துக்களை... சபையில் வெடிக்க...
பேராசிரியர் பழனியப்பன் நன்றி நவில...
மகாகவி பாரதி விழா மனம் நிறைந்து முடிவுற்றது...

இயக்கவாதிகளுக்கு  இலக்கியமும்...
இலக்கியவாதிகளுக்கு இயக்கமும்...

இருவரும் இணைந்த இந்த நிகழ்வு...
அடுத்த கட்ட நகர்வு... என்ற 
தோழர்.மாலி அவர்களின் பாராட்டுதல் 
இந்நிகழ்ச்சியின் உரைகல்...

No comments:

Post a Comment