Saturday 31 December 2016

தூய்மை கொள்...தொண்டு செய்...


தூய்மை கொள்ளுங்கள்...
தொண்டு செய்யுங்கள்... 
உதவி... இந்த வார்த்தையை 
உள்ளத்திலிருந்து அகற்றுங்கள்...
தொண்டு செய்வது என்ற சிந்தனையை 
இதயத்தில் கொள்ளுங்கள்...
துயரம் கொண்ட ஒரு மனிதனுக்கு...
ஒரே  ஒரு நாள் உள்ளன்போடு...
நான் தொண்டு செய்திருந்தால்...
அதுவே என் வாழ்வின் பாக்கியம்...
என்றார்  சுவாமி விவேகானந்தர்...

துயரப்படுவோருக்கு தொண்டு செய்வது...
அதைத் தூய மனதோடு செய்வது...
நமது  இயக்கம் நமக்கு கற்றுத்தந்துள்ளது....

தூய்மையும்... தொண்டும்...
தலைவனுக்கு அடையாளம்....
அத்தகைய அடையாளச்சின்னங்களாக...
தொண்டு செய்து வாழ்ந்து வழிகாட்டிய...
நேர்மை தடுமாறாத்தலைவர்கள் வழியில்...
தொடர்ந்து  தடம் பதிப்போம்....
தூய்மை கொள்வோம்... தொண்டு செய்வோம்...
இதுவே புத்தாண்டில் நம் உறுதிப்பாடு.....

அனைவருக்கும் 
இனிய ஆங்கிலப்புத்தாண்டு 
நல்வாழ்த்துக்கள் 
happy new year  animated greetings க்கான பட முடிவு

No comments:

Post a Comment