Saturday 6 October 2018

அக்டோபர் 10 அறப்போர்
ஒப்பந்த ஊழியர்களின் ஓய்வற்ற போராட்டம்…

காரைக்குடி மாவட்டத்தில்…

அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும்
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதக்கூலி
இன்னும் வழங்கப்படாத கொடுமை…

HOUSE KEEPING புதிய குத்தகையை
இன்னும் இறுதி செய்யாமல்
இழுத்தடிக்கும் அவலம்…

ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த
மூன்று வருடங்களாக போனஸ் வழங்கப்படாமல்
துணிந்து செய்யப்படும் துரோகம்…

இருபது லட்சத்திற்கும் அதிகமாக பிடித்தம் செய்து
நிர்வாகத்தின் கணக்கில் வைக்கப்பட்டுள்ள
EPF வைப்புநிதியை இன்னும்
ஊழியர் கணக்கில் செலுத்தாத மெத்தனம்…

காவல் பணியாளர்களின் வார விடுப்பில்
பணி செய்ய அமர்த்தப்படும் ஒப்பந்த ஊழியர்களுக்கு
கூலியைத் தராமல் ஈடு செய்யும் விடுப்பு தரப்படும் சுரண்டல்…

காசாளர், கணிப்பொறி இயக்குநர்,
அகன்ற அலைவரிசை தொழில்நுட்பவியலாளர்,
கேபிள் பழுது நீக்கும் செம்மையர்… எழுத்தர்,
என எத்தனையோ திறன்மிக்கப் பணிகள் செய்தாலும்…
எல்லோரையும் திறனற்றவர்கள்
UNSKILLED என்று சொல்லும் வன்கொடுமை…

இன்னும் எத்தனைக் காலம்தான்
இந்த அப்பாவிகள்… அடிமட்டத் தொழிலாளிகள்
இப்படியே சுரண்டப்படுவார்கள்… சீரழிக்கப்படுவார்கள்…

எனவே இனி பொறுப்பதில்லை…
அண்ணல் காந்தி பிறந்த அக்டோபர் மாதத்தில்…
அகிம்சை வழியில்… 10/10/2018 அன்று
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக
NFTE – BSNLEU இணைந்தஅறப்போர்….

தோழர்களே…
இழப்பதற்கு ஏதுமில்லை…. உணர்வைத்தவிர…
உணர்வுடன் வாரீர்… உரமோடு வாரீர்…
------------------------------------------------------------------------------------------
அறப்போர் தொடுப்போம்… அக்கப்போர் தடுப்போம்…

No comments:

Post a Comment