Tuesday 9 October 2018


ஒருபோதும்... ஓய்ந்திட மாட்டோம்...

08/10/2018 அன்று டெல்லியில்...
அனைத்து சங்கக்கூட்டம் நடைபெற்றது.
அமைச்சரின் வாக்குறுதிகள் தண்ணீரில் எழுத்தாய்
தடமற்றுப்போன நிலை பற்றி ஆழ்ந்து விவாதிக்கப்பட்டது.
எனவே நமது ஒன்றுபட்ட போராட்டங்களைத்
தொடர்ந்து நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்திட்டம்

29/10/2018 அன்று நாடெங்கும் நமது கோரிக்கைகளை
ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டுவருவது…

30/10/2018 அன்று மாவட்டத்தலைநகர்கள் 
மாநிலத்தலைநகர்கள் மற்றும் 
தலைநகர் டெல்லியில் மாபெரும் தர்ணா

14/11/2018 அன்று கோரிக்கை ஊர்வலம் 
மற்றும் கோரிக்கை மனு அளித்தல்.

30/11/2018க்குப் பின் 
காலவரையற்ற வேலை நிறுத்தம் 
 ----------------------------------------------------------------------------
கோரிக்கைகள்
மத்திய அரசே… BSNL நிர்வாகமே…

செல்கோபுரங்களைத் தனியார் பராமரிப்பிற்கு அனுமதிக்காதே..
ஆண்டிற்கு 1800 கோடி வீண் செலவுசெய்யாதே…

டெல்லி உயர்நீதிமன்ற உத்திரவின்படி
ITS அதிகாரிகளை  DOTக்குத் திருப்பி அனுப்பு…

மூன்றாவது ஊதியமாற்றத்தை அமுல்படுத்து…

ஓய்வூதிய மாற்றத்தை அமுல்படுத்து…

ஓய்வூதியப்பங்களிப்பை முறைப்படுத்து…

4G அலைக்கற்றையை உடனடியாக ஒதுக்கீடு செய்…
  ----------------------------------------------------------------------------

தோழர்களே…
ஓயாது கத்தும் கடலில்… 
ஒருபோதும் அலைகள் ஓய்வதில்லை…
மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக 
ஓயாது கத்தும் ஊழியர்களின்...
போராட்டங்களும் ஓய்வதில்லை…

தொடர்ந்து நாம் போராடுவோம்….
நம் உரிமைகளை வெல்வோம்..

No comments:

Post a Comment