Monday 15 October 2018


முதல் கல்… 

BSNL சொசைட்டியின் ராங் கால்..
என்ற தலைப்பிட்டு தமிழகம் முழுவதும்
முகநூல் மற்றும் Wattsappல்
பரபரப்பாகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னைக்கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான
வெள்ளனூர் நிலம் விற்கப்பட்டு விட்டது…
பலகோடிகளில் முறைகேடுகள் நடந்துள்ளது…
கூட்டுறவு சங்க அப்பாவி உறுப்பினர்களுக்கு
சொந்தமான சொத்து சூறையாடப்படுகிறது  
என அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தச்செய்தியைப் படித்ததில்
நமக்கு ஒன்றும்
ஆச்சரியமோ… அதிர்ச்சியோ இல்லை…
சென்னைக் கூட்டுறவு சங்கத்தில் ஊழல் என்பது
காலம் காலமாக நடக்கும் நிகழ்வுதான்…
இப்போது எல்லையற்றுப் போய்க்கொண்டிருக்கிறது….
அவ்வளவுதான்…

ஊழல் புரிபவர்கள்…
பொதுச்சொத்தைக் கொள்ளையடிப்பவர்கள்…
இன்றில்லாவிட்டாலும் என்றேனும் ஒருநாள்
சிக்கி சின்னாபின்னமாகிப்போவார்கள்… என்பது நிச்சயம்…

கூட்டுறவு சங்கப் பிரச்சினையில்
நமக்கு எழுவது ஒரே ஒரு கேள்விதான்…
நமது BSNL நிறுவனத்தில்…
தமிழகத்தில்….
அகில இந்திய அளவில்…
சென்னைக்கூட்டுறவு சங்கத்திடம்…
கையேந்தாத சங்கம் உண்டா?
கையேந்தாத அமைப்பு உண்டா?
கையேந்தாத தலைவர்கள் உண்டா?
சுரண்டி சுகம் காணாதவர்கள் எவரேனும் உண்டா?

பைபிளில் கூறப்பட்டுள்ளது போல…
அப்படி யாரேனும் ஒருவர் இருந்தால்…
அவர்கள் முதல் கல்லை எறியட்டும்…

2 comments:

  1. நான் என்றும் கையேந்தியது இல்லை. கையேந்திவர்கள் பட்டியலில் பெரும் புரட்சித் தலைவர்களின் பெயர்கள் இருப்பதாகக் கேள்வியுற்றதும் மனம் கொதித்து எழுதியவன் நான். இன்று முதல் இல்லை எறிந்தேனா எனத் தெரியவில்லை. ஆனால் கல்லெறிந்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. முதல் கல்லை என வாசிக்கவும்.
      நா.வீரபாண்டியன்.

      Delete