Tuesday 9 October 2018


ஒப்பந்த ஊழியர் போராட்டம்

ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக
10/10/2018 அன்று காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில்
NFTE – BSNLEU இணைந்து அறப்போர் நடத்த அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் நேற்று 09/10/2018 
நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
 ----------------------------------------------------------------------------
ஆகஸ்ட் மாதச்சம்பளம் 
உடனடியாகப் பட்டுவாடா செய்யப்பட்டது.

செப்டம்பர் மாதச்சம்பளம் 
விரைந்து பட்டுவாடா செய்யப்படும்.

புதிய HOUSE KEEPING குத்தகை 
10/10/2018 முதல் அமுல்படுத்தப்படும்.

3ந்தேதிக்குள் GM அலுவலகத்திற்கு 
வருகைப்பதிவு அனுப்பிட வேண்டும்.

10ம் தேதிக்குள் பில்கள் பரிசீலனை 
செய்யப்பட்டு பட்டுவாடாவுக்கு அனுப்பப்படும்.

போனஸ் வழங்கக்கோரி 
குத்தகைக்காரர்களுக்கு கடிதம் எழுதப்படும்.

போனஸ் வழங்காத பட்சத்தில் 
அவர்களது காப்புத்தொகை கைவைக்கப்படும்.

காவல்பணி செய்யும் தோழர்களின் 
வார ஓய்வு பிரச்சினை சரிசெய்யப்படும்.

பிடித்தம் செய்து வைக்கப்பட்டுள்ள EPF தொகை 
பற்றி விளக்கம் கேட்டு முடிவெடுக்கப்படும்.

திறனுக்கேற்ற கூலி வழங்கிட குழு அமைக்கப்பட்டு அதற்கேற்ப முடிவு செய்யப்படும்.

பேச்சுவார்த்தையில் நிர்வாகத்தின் சார்பாக
துணைப்பொதுமேலாளர், உதவிப்பொதுமேலாளர்
மற்றும் துணைக்கோட்ட அதிகாரி(பொது)
ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிர்வாகத்தின் அணுகுமுறைக்கு நமது நன்றிகள் பல.

எனவே நமது இணைந்த போராட்டம்
24/10/2018க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment