Monday 29 October 2018


செந்தொண்டர் சக்திவேல்… 

ஜீவா அவர்களின் உற்ற தோழர்…
ஜெகன் அவர்களின் உரிமைமிகு தோழர்…
தோழர். தா.பா அவர்களின் இளமைக்கால தோழர்…
தோழர் அய்யர் அவர்களின் அனுக்கத்தோழர்…
பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர்…

காலுக்கு செருப்பில்லாத…
கால் வயிற்றுக்கு கஞ்சியில்லாத ஜீவன்களுக்காக..
காரைக்குடியில் ஜீவா நகர் உருவாக்கியவர்…

காரைக்குடி பகுதியில் களம் பல கண்டவர்….
காரைக்குடி நகரின் மிகச்சிறந்த தையல் கலைஞர்…
தொலைத்தொடர்பு தோழர்களோடு தோழமை மிக்கவர்…
மக்களுக்கான கலை இலக்கியத்தில் தடம் பதித்தவர்…

வெண்ணிற ஆடை வெண்திரை சினிமாவிற்காக…
அன்றைய AVM நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டு…
மனைவியின் உடல்நலக்குறைவால் அந்த வாய்ப்பை துறந்தவர்…

BSNL என்னும் அரசு நிறுவன சேவையை மட்டுமே…
பெருமையோடு காலம் முழுக்கப் பயன்படுத்தியவர்…

எங்களின் உற்ற வழிகாட்டி…
தோழமையின் அடையாளம்…
இளைஞர்களுக்கு எழுச்சி தந்தவர்…
அனுபவத்தின் அடையாளம்…

அருமைத்தோழர். சக்திவேல் அவர்கள்
வயது மூப்பின் காரணமாக
29/10/2018 அன்று இயற்கை எய்தினார்…

அவரது மறைவிற்கு 
செங்கொடி தாழ்த்திய அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்...
அவரது வழியில் அயராது நடைபோடுவோம்...

No comments:

Post a Comment