Tuesday 2 October 2018


அண்ணல் காந்தி புகழ் பாடுவோம்…. 

இன்று 02/10/2018
அண்ணல் காந்தி அவதார தினத்தில்
காரைக்குடி நகரின் அரசியல் களமான
காந்தி திடலில் வீற்றிருக்கும்
அண்ணல் காந்தியின் திருவுருவச்சிலைக்கு
தோழர்கள் மாலை அணிவித்து மகிழ்ந்தனர்.

AITUCயின் மூத்த தோழர் 
பழ.இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில்
AITUC நகரசுத்தி தொழிலாளர்கள்,
NFTE தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள்,
ஒய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும்
கலைஇலக்கியப்பெருமன்றத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

தோழியர். கார்த்திகா JTO அவர்கள்
அண்ணல் சிலைக்கு மாலை அணிவித்து மாண்பு செய்தார்.

கலை இலக்கியப்பெருமன்ற கிளைத்தலைவர்
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தோழர்.குணசேகரன் அவர்கள்
தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
ஒய்வூதியர் சங்க மூத்த தோழர்.நாகேஸ்வரன் அவர்கள்
காந்தி அவர்களின் மாண்பு பற்றியும்…
கழுத்து நெரிக்கப்படும் கருத்து சுதந்திரம் பற்றியும்
எழுச்சிமிகு குரலோசையால் தோழர்களுக்கு எழுச்சியூட்டினார்.

BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன்,
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி,
NFTE மாவட்டத்தலைவர் தோழர்.லால்பகதூர்,
AIBSNLEA மாவட்டத்தலைவர் தோழர் தமிழ்மாறன் மற்றும்
கலைஇலக்கியப்பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் 
தோழர்.மணிபாரதி
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உணர்வோடு கலந்து கொண்ட 
தோழர்களுக்கு நல்வாழ்த்துக்கள்….
2018 அக்டோபர் 2 முதல் 2019 அக்டோபர் 2 வரை
அண்ணலின் 150வது அவதார தினப் பெருவிழாவை
உற்சாகமோடு நாடெங்கும் கொண்டாடுவோம்.

No comments:

Post a Comment