Tuesday 16 October 2018


என் சோகக்கதையைக் கேளு…

என் பெயர் R.சுதா
அலுவலகக் கண்காணிப்பாளர் – காரைக்குடி
இப்போது நம்ம பெயருக்கு மட்டும்
ஒன்னும் குறைச்சல் இல்லை….

நான் RTP என்னும் அன்றாடக்கூலியாய் பணிக்குள் அமர்ந்து
11/08/1986ல் தொலைபேசி இயக்குநராய்ப் பணி நிரந்தரம் பெற்றேன்.

தோழர்.குப்தா காலத்தில் SR.TOA பதவி உயர்வு வந்தது…
மொத்த சேவையையும் சேர்த்து முதற்கட்டப்பதவி உயர்வும் வந்தது…
11/08/2002ல் 7100-200-10100 சம்பளவிகிதத்தில் OTBP கிட்டியது.

அதன் பின் நாலுகட்டப்பதவி உயர்வு வந்தது…
அப்போதுதான் எனக்கு சோதனை துவங்கியது…

01/10/2004ல் நாலுகட்டப்பதவி உயர்வு பெற்ற
என்னை விட சேவையில் இளையோர்களுக்கு
சம்பளம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டது…

எனவே சிலரது ஆலோசனையின்படி
01/10/2004 முதல் நாலுகட்டப்பதவி உயர்வு
பெற விருப்பம் தெரிவித்தேன்…
அங்கேதான் என் சோகம் ஆரம்பமானது…

7100-200-10100 சம்பளவிகிதத்தில் இருந்த நான்
நாலுகட்டப்பதவி உயர்வு என்னும்
பரமபத விளையாட்டில் 6550-185-9325 என்னும்
சம்பளவிகிதத்திற்கு கீழே தள்ளப்பட்டேன்….

உலகிலேயே பதவி உயர்வு பெற்று…
கீழே உள்ள சம்பளத்திற்கு தள்ளப்பட்ட
கொடுமை இங்கு மட்டுமே நிகழ்ந்தது…
எழுத்தர்… இயக்குநர் என்றால்தான் கேட்பார் யாருமில்லையே…

01/10/2011ல் அடுத்த நாலுகட்டப்பதவி  உயர்வு கிட்டியது…
7100-200-10100 சம்பளத்திற்கு இணையான
ரூ.13600-25420 சம்பள விகிதத்தில் சம்பளம் பொருத்தப்பட்டது..

அதாவது 11/08/2002ல்
நான் பெற்ற 7100-200-10100 சம்பளத்தை
01/10/2004ல் இழந்து… மீண்டும்
01/10/2011 அன்று மதுரையை மீட்ட சுதாவாக அடைந்தேன்…

இனிமேல்தான் ஒரிஜினல் சோகம் உருவானது…
01/01/2015ல் ரூ.25040/= அடிப்படைச்சம்பளம் அடைந்து
01/01/2016ல் வெறும் ரூ.380/= ஆண்டு உயர்வுத்தொகை பெற்று
ரூ.25420/- உச்சநிலை சம்பளம் பெற்று தேக்கநிலையை அடைந்தேன்…
01/01/2017ம் ஆண்டு தவறேதும் செய்யாமல்…
தேக்கநிலையால் ஆண்டு உயர்வுத்தொகை இழந்தேன்…

மூன்றாவது ஊதிய மாற்றம் 01/01/2017 முதல்
அமுல்படுத்தப்பட்டால் தேக்கநிலை சற்று தளரும்…
ஆனால் 2016ல் ஆண்டு உயர்வுத்தொகை முழுமையாக அடையாததால்
மூன்றாவது ஊதியமாற்றத்தில் முழுமையாக
ரூ.1000/= அடிப்படைச்சம்பளத்தில் குறையும்…
என் ஆயுள் முழுக்க இதன் பாதிப்பு தொடரும்…

என் போன்றவர்கள் செய்த தவறென்ன?
7100-200-10100 சம்பளத்தில் OTBP பெற்றது தவறா?

01/10/2004 முதல்…
நாலுகட்டப்பதவி உயர்விற்கு விருப்பம் தந்தது தவறா?

என்னைப்போன்றவர்கள் நாடுமுழுக்க ஆயிரம் பேர் உண்டு…
ஆனால் ஒவ்வொருவரும் செய்வதறியாது விழிக்கின்றனர்….

உயர்ந்த பட்ச சம்பளத்தில் இருந்தோரை…
பதவி உயர்வு என்ற பெயர் சொல்லி
கீழ்மட்ட சம்பளத்திற்கு கொண்டு வந்ததென்ன நியாயம்?

என் போன்றோருக்கு நேர்ந்த அநியாயத்தை
அகற்ற வேண்டியது இலாக்காவின் பணியல்லவா?

எண்ணற்ற தோழர்களுக்கு இழைக்கப்பட்ட
அநீதியைக் களைய வேண்டியது சங்கத்தின் கடமையல்லவா?

No comments:

Post a Comment