Tuesday 21 April 2015

ஏப்ரல் 21
முதல் நாள் வேலை நிறுத்தம் 
காரைக்குடி பொதுமேலாளர்  அலுவலக
கதவுகள் தாள் மூடிய காட்சி 

காரைக்குடியில் 
முதல் நாள் போராட்டம் 
முழுமையான உணர்வுடன் நடந்தேறியது...

ஓரிரு சண்டாளர்களைத் தவிர 
தோழர்கள் சண்டமாருதமாய் 
போராட்டத்தில் ஈடுபட்டனர்...

எதிர்நிலை எடுக்காது... விடுப்பு எடுத்து
தங்கள் ஆதரவு தந்த FNTO தோழர்கள்...

இரண்டு நாள் வேலை நிறுத்தத்திற்காக.. 
எட்டு  நாள் விடுப்பைத் தியாகம் செய்த .. 
மருத்துவ விடுப்பு மாமேதைகள்...

போராட்டத்திற்கு துணை நின்ற
துணைப்பொதுமேலாளர்கள்...

ஏப்ரல் மாதச்சம்பளத்தில்...
எடுப்புச்சம்பளம் இரண்டு நாள்தான் 
என்ற நிலையிலும் தயங்காது போராடிய தோழர்கள்...
என அனைவருக்கும் நமது நன்றிகள்..

முதல் நாள் முனைப்பு சிறிதும் குன்றாமல் 
இரண்டாம் நாள் போராட்டத்தையும் 
கூர் தீட்டுவோம் தோழர்களே...

No comments:

Post a Comment