Saturday 18 April 2015

காரைக்குடி
வேலை நிறுத்த விளக்கக்கூட்டம் 
AIBSNLEA அகில இந்திய ஆலோசகர்
தோழர்.VKP அவர்களுக்கு
NFTE மாவட்டத்தலைவர் தோழர்.முருகன்
 பொன்னாடை அணிவித்தல் 

18/04/2015 அன்று காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் 
அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பாக வேலை நிறுத்த விளக்க கூட்டம் கூட்டமைப்புத்தலைவர்  தோழர்.மாரியின் தலைமையில்  
சிறப்புடன் நடைபெற்றது. 

அனைத்து சங்கத்தலைவர்களும் உரையாற்றினர்.
  BSNLEU சார்பாக அதன் மாநில அமைப்புச்செயலர் 
 தோழியர்.மல்லிகா அவர்களும், 
AIBSNLEA சார்பாக அதன் அகில இந்திய ஆலோசகர்
 தோழர்.VK.பரமசிவம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 
தோழர்.VKP  சீர்மிகு BSNL நிறுவனம் ஆள்வோரால் 
இன்று சீரழிக்கப்பட்ட நிலையை சிந்தை உரைக்க கூறினார்.  
BSNL நிறுவனம் காத்திட  சிவப்புச் சித்தாந்த வழியில் அயராது  நடைபோடும் நமது தொழிற்சங்க இயக்கங்களின் பெருமையையும் நயமுடன் எடுத்துரைத்தார். 

வியாதிக்காக மருத்துவ விடுப்பு எடுக்கும் நிலை போய்..  
போராட்டக்காலங்களில்...
 மருத்துவ விடுப்பு எடுப்பதே ஒரு வியாதியாக
 போய்விட்ட நிலையையும் வேதனையுடன் குறிப்பிட்டார்.  

ஒப்பந்த ஊழியர்கள் சார்பாக பேசிய   தோழர்.மாரிமுத்து.. 
நடக்கவிருக்கும் போராட்டத்தில் 
ஒப்பந்த ஊழியர்கள்..
இத்தனை நாள் உரிமையை இழந்தோம்...
இன்று இந்த நிறுவனம் வளம்பெற 
இரண்டு நாட்கள் ஊதியத்தையும்  இழப்போம்...
என உறுதியளித்தார்.

உரிமை இழப்போம்..
ஊதியம் இழப்போம்..
ஒருநாளும் 
உணர்வை இழக்க மாட்டோம் 
என சூளுரைத்து கூட்டம் இனிதே முடிவுற்றது.

No comments:

Post a Comment