Thursday 10 December 2015

நன்று செய்த... நாகர்கோவில் 

நன்று கருது.. நாளெல்லாம் வினை செய்.. 
என்றான் நாட்டுக்குழைத்த  பாரதி...

பாரதியின் வரி பற்றி.. அவனது வழி பற்றி...
நாகர்கோவில்  மாவட்ட BSNL தோழர்கள்..
உள்ளத்தால் ஒன்று பட்டு..
வெள்ளத்தால் துயரப்பட்ட  சென்னை மக்களுக்கு 
உடமைகளாகவும்.. உணவுப்பொருட்களாகவும்..
ஒரு லட்சத்து அறுபத்தேழாயிரம்  பணமாகவும்.. 
தங்கள் பங்களிப்பை சிறப்பாகச் செய்துள்ளனர்..
நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்...

அனைத்துப்பகுதி ஊழியர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து..
முன் முயற்சி எடுத்து.. முழு முனைப்புடன்  பணியாற்றி..
அரும் செயல் செய்துள்ள 
நாகர்கோவில் பொதுமேலாளர் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்...

மற்ற மாவட்டப் பொதுமேலாளர்களுக்கும்..
நாம் வாழ்த்துக்கள் தெரிவிக்க தயாராகவே உள்ளோம்...

No comments:

Post a Comment