Wednesday 23 December 2015

நபி மொழி சொல்வோம்...

உழைப்பவன் வியர்வை காயுமுன்னே அவனது கூலியைக் கொடுங்கள்...

இடது கைக்கு தெரியாமல் வலது கையால் உதவிகளை வழங்குங்கள்...

அநாதையாக இருப்போரிடம் அன்பு செலுத்துங்கள்...

பசித்தவனுக்கு உணவளிப்பதே மிகச்சிறந்த தர்மம்...

ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும்...

அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் உண்ணக்கூடாது...

ஏழைகளை அரவணைக்கும் வீடே இறைவனுக்கு விருப்பமான வீடு...

உன் சகோதரன் துன்பத்தின் மீது இன்பம் கொள்ளாதே..

உன் தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது....

பணியாட்கள் மீது அதிகாரத்தை தவறாக உபயோகிப்பவன்
ஒரு போதும்  சொர்க்கம் செல்லமாட்டான்...

No comments:

Post a Comment