Thursday 5 December 2013

டிசம்பர் - 6 - 
அண்ணல் அம்பேத்கார் 
நினைவு நாள் 

வலுத்தவன்  காலுக்கு செருப்பாய் நடந்தவனை 
அவன் தன் காலுக்கு செருப்பிட வைத்தவர்..

துயரத்தில்  மாடாய் உழைத்தவனை 
உயரத்தில் மேடாய் உட்கார வைத்தவர் ..

தலையைச்  சொறிந்த கரங்களை 
தலைக்கு மேலே  உயர்த்த வைத்தவர்..

விட்டத்தைப்  பார்த்து வெறித்தவனுக்கு 
சட்டத்தை  சமதர்மத்தைப் போதித்தவர்..

அமைதி புத்தத்தை தழுவியவர்...
அடிமை பித்தத்தை போக்கியவர்.. 

சாதிப்பள்ளத்தை சரிநிகராய் மேவியவர்...
சேரிக்கு சரஸ்வதியை செல்ல வைத்தவர்...

எளிய மக்கள்  உள்ளத்தில் நிறைந்தவர்...
அண்ணல் அம்பேத்கார் 
நினைவைப் போற்றுவோம்..

No comments:

Post a Comment