Thursday 26 December 2013

MTNL ஓய்வூதியம் 

ஏறத்தாழ 43000 MTNL ஊழியர்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையான BSNLக்கு இணையான ஓய்வூதியம் என்பது தற்போது மத்திய அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

BSNL போலவே DOT மற்றும் MTNLலில் பணிபுரிந்த மொத்த சேவைக்காலத்திற்கும் COMBINED SERVICE 
ஓய்வூதியம் வழங்கப்படும். 

ஓய்வூதியப்பங்களிப்பு PENSION CONTRIBUTION என்பது 31/12/2005 வரை IDA சம்பளத்தின் அதிகபட்சத்திலும் 01/01/2006க்குபின் ACTUAL PAY உழியர்கள் வாங்கிய சம்பளத்தின் அடிப்படையிலும் கணக்கீடு செய்யப்படும்.

இதற்காக ஓய்வூதிய விதி RULE 37Aல் 3 மாதங்களுக்குள் 
திருத்தம் கொண்டு வரப்படும். 

இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 500 கோடி செலவாகும். 

இந்த ஓய்வூதியப்பலனை பெற MTNL ஊழியர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL உருவாக்கத்தின் போது தோழர். குப்தா, ஓய்வூதியத்தை மட்டும் வாங்கி விட்டு MTNL போல உயர் சம்பளம் வாங்கத்தவறி விட்டார் என்ற குற்றச்சாட்டு பலமாக ஒலித்தது. ஆனால் உயர் சம்பளம் வேண்டாம் ஓய்வூதியமே போதும் என MTNL ஊழியர்கள் சரியான நிலை எடுத்து தங்களது கோரிக்கையை வென்றுள்ளனர். 

MTNL ஊழியர்களுக்கு நமது வாழ்த்துக்கள். 

எங்கும், எப்போதும்,எதிலும் தீர்க்கமாக 
முடிவெடுத்த தோழர்.குப்தாவிற்கு 
நமது வணக்கங்கள். 

No comments:

Post a Comment