Monday 30 December 2013


அன்பைப்  பொழிந்த பூபதிக்கு 
அம்பை இராமனின் வாழ்த்து மடல் 

வாழிய பூபதி..


கொள்கை அணைத்தொரு கொடியைப்பிடித்தவன் 
சாதியை மறுத்தொரு  சந்திர ஒளியை தனக்கென ஆக்கியவன்..

பூவின் மணத்தொரு நேசம் நிறைந்த பாசத்தலைவனவன்..
சத்திய வேதம் சமத்துவ நிலையை 
நித்தமும் வேள்வி செய்கிற வீரனவன்..

கற்பது கற்றபின் அதன் வழி நிற்கின்ற ஞானியவன் 
என்போல் ஏழைமை மிக்கோர் ஏதிலர் மீது 
தோழமை செய்தே துன்பம் துடைக்கிறவன்..

இராமனின் தம்பியர் குகனோடு ஐவராம்..
காரை இரா.பூபதி இளவல்கள் எத்தனையோ 

வேறு நிறத்தோடு வேகம் நிறைத்தொரு 
மாந்தனைக்கண்டுவிட்டால் 
வாரி அணைத்தவன் ஞானம் அறிந்திடுவான்..
பொதுமை புகுத்திடுவான்..

ஏட்டினில் அடங்கா   அவனது நன்னெறி..
வீட்டினில் முடங்கா அவனது செயல்வழி..

நடமாடும் அறிவுக்களஞ்சியமவன் 
சிந்துவின் தந்தையவன்..
பிரகாசனைப்பெற்ற எந்தையவன்..
ஜீவா வழியில் இலக்கியப்பயணத்தில் 
என் போல் எண்ணிலரை சேர்த்தவன்..

பெரியாரை மதித்தவன்..
பாரதியை வரித்தவன்.. 

அகவைகள் அறுபது  இன்று     இவனுக்கு..
அகவைகள் ஆயிரம் இன்னும் இவனுக்கு..

பொதுமை வேல் எடுத்து படை திரட்டிட்ட 
பூபதியின் பால் வாழ்கின்ற நானும் பாட்டிசைத்தேன்..
பூபதி போல் வாழ்ந்திட மனமிசைந்தேன்..

இவன் தமிழ் முழக்கம் எங்கணும் எழுக..
வாழிய பூபதி..
வாழிய நெடுந்தமிழ்..

வாழ்த்துக்களுடன்..
இரா. கணபதிராமன் 
காரைக்குடி NFTE முன்னாள் மாவட்டச்செயலர்
அம்பாசமுத்திரம்.

No comments:

Post a Comment