Sunday 20 December 2015

தொழிலாளர் நல அதிகாரியுடன் சந்திப்பு 

ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் தீர்விற்காக..
காரைக்குடி மாவட்ட நிர்வாகத்துடன்...
சந்திப்புக்கள் ஆண்டுக்கணக்கில் ... நடந்துள்ளன...
கோரிக்கைகள் கிலோக்கணக்கில்.. கொடுக்கப்பட்டுள்ளன..
உத்திரவாதங்கள் டன் கணக்கில்... அளிக்கப்பட்டுள்ளன...
ஆனாலும்...
ஒப்பந்த ஊழியன் வயிறு ஒட்டியே கிடக்கிறது...

எனவே.. காரைக்குடி மாவட்ட நிர்வாகத்தால் 
தொடர்ந்து மனிதாபிமானமற்று  இழுத்தடிக்கப்படும்
ஒப்பந்த ஊழியர் பிரச்சினையில்  தலையிடக்கோரி 
நாளை 22/12/2015 - LEO 
மதுரை மத்திய தொழிலாளர் நலச்சட்டங்கள் அமுலாக்க அதிகாரியை 
(LABOUR ENFORCEMENT OFFICER, CENTRAL ) 

NFTE, BSNLEU, TNTCWU, TMTCLU
சங்கங்கள்  இணைந்து சந்திக்கின்றன...

தோழர்களே...
தொழிலாளர் நல அதிகாரியாலும் 
நியாயங்கள் நிலை நிறுத்தப்படவில்லையென்றால்...

அடுத்த கட்ட இணைந்த போராட்டம்...
உலகமே அழிந்தாலும் உறங்கிக் கொண்டிருக்கும்.. 
எம்பெருமான் வைகுண்டநாதன்.. 
பள்ளி கொண்டிருக்கும் பள்ளியில்...
திருச்சிராப்பள்ளியில்...

தோழர்களே... தயாராவீர்...

2 comments:

  1. காத்திருக்கின்றோம் செயல்பட ஏதாவது ஒன்று தோழர்களுக்கு செய்ய வேண்டும்

    ReplyDelete
  2. காத்திருக்கின்றோம் செயல்பட ஏதாவது ஒன்று தோழர்களுக்கு செய்ய வேண்டும்

    ReplyDelete