Friday 25 September 2015

தமிழ் மாநில செயற்குழு 
மயிலாடுதுறை 

நமது தமிழ் மாநில செயற்குழு 23/09/2015 அன்று 
மயிலாடுதுறையில் மாநிலத்தலைவர்
 தோழர்.இலட்சம் அவர்கள்
தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. 

பணி நிறைவு  பெற்ற 
மாநிலத்தலைவர்.இலட்சம் 
அகில இந்தியச்செயலர். தோழர்.கோபால கிருஷ்ணன் 
சிறப்பு அழைப்பாளர். தோழர். கிருஷ்ணகிரி முனியன் 
மாநில உதவித்தலைவர். தோழர். திருச்சி மனோகரன் 
ஆகியோரின் சங்கப்பணி வெகுவாகப் பாராட்டப்பட்டது.

மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி 
நடந்து முடிந்த வேலை நிறுத்தங்கள் 
BSNL புத்தாக்கப்பணிகள் 
செல்கோபுரங்கள் பிரிப்பு 
அகன்ற அலைவரிசைப் பழுது நீக்கத்திற்கு தனியார்  அனுமதிப்பு..
பல்வேறு ஊழியர் பிரச்சினைகள் 
மற்றும் வரவிருக்கும் ஊழியர் சரிபார்ப்பு 
ஆகியன பற்றி தமது கருத்துக்களை 
தெளிவுபட, திறம்பட  எடுத்துரைத்தார்.

மாவட்டச்செயலர்கள், மாநிலச்சங்க நிர்வாகிகள் 
மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தோழர்கள்.ஜெயபால்,சேது 
ஆகியோரும் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன...

வரும் 01/10/2015 - BSNL தினத்தை 
கிளைகள் தோறும் கொண்டாடுவது.

பகுதிவாரிக் கிளைச்செயலர்கள் கூட்டத்தை
 அக்டோபருக்குள்  நடத்துவது.

இந்த ஆண்டு தற்காலிகப் போனஸ் பெற 
முழு முயற்சிகள் மேற்கொள்வது..

TTA மற்றும் TM இலாக்காத்தேர்வு எழுத 
நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியை தளர்த்துவது.

JAO காலியிடங்களில் தேர்வு பெற்ற தோழர்களுக்கு
 தற்காலிகப் பதவி உயர்வு வழங்குவது...

மாநில மாநாட்டை வேலூர்,சேலம் அல்லது 
கடலூர் மாவட்டங்களில் நடத்துவது..

வாழ்த்துக்களும்... பாராட்டுக்களும்..

செப்டம்பர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட
 அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

TTA தோழர்களுக்கு ஒரு ஆண்டு உயர்வுத்தொகை கிடைக்க 
வகை செய்த மத்திய சங்கத்திற்கு பாராட்டுக்கள்... 
இது மற்ற கேடர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்...

பதவிப்பெயர் மாற்றம் செய்ததில் நமது மத்திய சங்கத்தின் 
பங்கு பாராட்டுக்குரியது. அதே நேரத்தில்
 எழுத்தர் கேடருக்கு உரிய பெயர் மாற்றம் செய்திடல் வேண்டும்.. 

பயிற்சிக்கால உதவித்தொகையை உயர்த்த பாடுபட்ட 
மத்திய சங்கத்திற்கு பாராட்டுக்கள்.. 

பல்வேறு வழக்குகளால் பின்னடைவு பெற்ற   JTO தேர்வு முடிவுகளை இறுதியில் வெளியிட வைத்த
 மத்திய சங்கத்திற்கு நன்றிகள்...

நீண்ட நாட்களாக JTO பதவியில் தற்காலிகப் பதவி உயர்வு வகிக்கும் 
TTA  தோழர்களுக்கு நிரந்தரப் பதவி உயர்வுக்கு வழி செய்த 
மத்திய சங்கத்திற்கு பாராட்டுக்கள்...

தோழர்களே...
இடைவிடாத செவிக்குணவு... 
இன்சுவை மாறாத  அறுசுவையுணவு...
என நமது மாநில செயற்குழு 
பல்வேறு பிரச்சினைகளை விவாதித்து 
பாங்குடன்.. பயனுடன்   முடிவுற்றது....
மயிலாடுதுறைக்கு வந்தோர்.. 
மனம் நிறை பேறு பெற்றோர்...

No comments:

Post a Comment