Thursday 24 September 2015

எழுக... வெல்க...
புதிய தலைமுறை...
குடந்தை மாவட்டத்தலைவர் தோழர்.கணேசன்
மாவட்டச்செயலர் தோழர்.விஜய் ஆரோக்கிய ராஜ் 

ஆறுபடை கொண்ட குடந்தையின் ..
NFTE  மாவட்ட மாநாடு...
ஆரவார ஏற்பாடுகளோடு... 
ஆறுவேளை அறுசுவை உணவோடு...
22/09/2015 அன்று மயிலாடுதுறையில்...
சீரோடும்.. சிறப்போடும்.. நடந்து முடிந்துள்ளது..

மாவட்ட மாநாட்டில் 
ஒரு மனதாய்.. முழுமனதாய்... இளமனதாய்.. 
தேர்ந்தெடுக்கப்பட்ட 
மாவட்டத்தலைவர்கணேசன் 
மாவட்டச்செயலர்.  விஜய் ஆரோக்கிய ராஜ் 
மாவட்டப்பொருளர். பாலமுருகன் 
ஆகியோரின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
================================================

தொலைபேசியில்...
பேசிப் பேசி...
சங்கம் வளர்த்து அந்தக்காலம்.. 
facebookல்.. 
சங்கம்  வளர்ப்பது இந்தக்காலம்..

இன்றைய தொழிலாளிக்கு... 
அரிவாளும் சுத்தியலும் வேண்டும்..
அறிவால் அறிவியலால் இணைந்திடும்.. 
முகநூலும்... இணையதளமும்... வேண்டும்...

பாரம்பரியமிக்க குடந்தையின்..
புதிய தலைமுறையாய்..
பொறுப்பேற்றுள்ள தோழர்.விஜய் அவர்களை 
பாரதியின் வரிகளால் வாழ்த்துகிறோம்...
வாழ்க... வளர்க... வெல்க...

ஒளிபடைத்த கண்ணினாய்       வா... வா... வா...
உறுதி கொண்ட நெஞ்சினாய்    வா... வா... வா...
களிபடைத்த மொழியினாய்      வா... வா... வா...
கடுமை கொண்ட தோளினாய்  வா... வா... வா...
தெளிவு பெற்ற மதியினாய்        வா... வா... வா...
சிறுமை கண்டு பொங்குவாய்    வா... வா... வா...
எளிமை கண்டு இறங்குவாய்    வா... வா... வா...
ஏறு போல் நடையினாய்             வா... வா... வா...
இளைய பாரதத்தினாய்               வா... வா... வா...

அன்பு வாழ்த்துக்களுடன் 
NFTE  காரைக்குடி மாவட்டச்சங்கம்.

No comments:

Post a Comment