Thursday 21 November 2019


நாலுகட்டப்பதவி உயர்வு...

விடுபட்ட தோழர்களுக்கு CR அனுப்புதல்...

காரைக்குடி மாவட்டத்தோழர்கள் 138 பேருக்கு
01/10/2019 முதல் நாலுகட்டப்பதவி உயர்வு உத்திரவு
மதுரை வணிகப்பகுதி நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 40 தோழர்களுக்கு பதவி உயர்வு விடுபட்டுள்ளது.
இதில் இருபதுக்கும் அதிகமான தோழர்களுக்கு CR வரவில்லை.
குறிப்பாக காரைக்குடிப் பகுதி SALES TEAMல் பணிபுரிந்த
தோழர்களின் CR  மதுரைக்கு அனுப்பப்படவில்லை. ‘
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நினைவூட்டியும் பலன் இல்லை.
காரைக்குடியில் பெருமளவு ஊழியர்கள் விருப்ப ஓய்வில்
செல்ல உள்ள நிலையில் அவர்களின் பதவி உயர்வு, 
CONFIRMATION உத்திரவு, தனிநபர் சம்பளப்பிரச்சினை போன்றவை 
உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்.  
நாலு கட்டப்பதவி உயர்வுக்குத் தகுதியான ஊழியர்களுக்கு 
CR அனுப்புவது தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டால் 
சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கண்டித்து
போராட்டம் நடத்தப்படும். நமக்கு  வேறு வழியில்லை.
கிளைச்செயலர்கள் மீண்டும் ஒருமுறை அனைத்து அதிகாரிகளையும்
நேரில் சந்தித்து CR அனுப்பிட வலியுறுத்த வேண்டுகிறோம்.

பதவி உயர்வு சம்பள நிர்ணய விருப்பம்...

நாலுகட்டப்பதவி உயர்வு பெற்ற தோழர்கள்
தங்களது பதவி உயர்வு சம்பள நிர்ணயத்தை
பதவி உயர்வுத்தேதி அல்லது தங்களது ஆண்டு உயர்வுத்தேதி..
இதில் எது அவர்களுக்கு அதிகப் பலன் அளிக்கிறதோ
அந்த தேதிக்கு விருப்பம் OPTION கொடுக்க வேண்டும்.
இதுவரை சுமார் 70 தோழர்களிடம் இருந்து மட்டுமே
விருப்பக்கடிதம் வந்துள்ளது. மீதமுள்ள தோழர்கள்
விருப்பக்கடிதத்தை உடனடியாகக் கொடுக்க வேண்டும்.
கிளைச்செயலர்கள் கவனம் செலுத்திட வேண்டும்.
சங்க வித்தியாசம் இன்றி பதவி உயர்வு பெற்ற அனைத்து தோழர்களையும் அணுகி விருப்பக்கடிதத்தைப் பெற்று உடனடியாக 
மதுரை கணக்கு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டுகிறோம்.

2 comments: