Wednesday 13 November 2019


இந்தியாவின்...சிற்பி
நவம்பர் 14
பண்டித நேரு பிறந்த நாள்...

புதிய இந்தியாவின் புதுமைச்சிற்பி...
புத்தகங்களை வாசித்தவர்...
குழந்தைகளை நேசித்தவர்....
மதச்சார்பின்மையை சுவாசித்தவர்...

பொதுத்துறை என்னும் 
ஆலயங்களைக் கட்டியெழுப்பியவர்...
அடிக்கல் நாட்டிட... ஆலயம் எழுப்பிட...
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு...
இரண்டு முறை நேரில் வந்தவர்...

இந்திய தேசத்தை 
இதயத்தில் நிறுத்தியவர்...
AIIMS, IIT, IIM என பெருமைமிகு
நிறுவனங்களை நிறுவியவர்...

உலக நாடுகளுக்கு அமைதியைச் சொன்னவர்...
அணிசேரா நாடுகளை ஒருங்கிணைத்தவர்...

ஆசியாவின் ஜோதி...
இந்தியாவின் சிற்பி...
உலகத்தின்  தோழர்...
பொதுவுடைமை விரும்பி...
பண்டித ஜவகர்லால் நேரு...புகழ் ஓங்குக....

No comments:

Post a Comment